Rishabh Pant: விக்கெட் கீப்பர்களில் உலக சாதனை! கில்கிறிஸ்ட், சங்ககாரா, ஏபி டிவில்லயர்சை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பண்ட்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Rishabh Pant: விக்கெட் கீப்பர்களில் உலக சாதனை! கில்கிறிஸ்ட், சங்ககாரா, ஏபி டிவில்லயர்சை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பண்ட்

Rishabh Pant: விக்கெட் கீப்பர்களில் உலக சாதனை! கில்கிறிஸ்ட், சங்ககாரா, ஏபி டிவில்லயர்சை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பண்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 21, 2024 07:45 PM IST

டி20 உலகக் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பர்களில் உலக சாதனை புரிந்துள்ளார் ரிஷப் பண்ட். கில்கிறிஸ்ட், சங்ககாரா, ஏபி டிவில்லயரஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முந்தியுள்ளார்.

விக்கெட் கீப்பர்களில் உலக சாதனை புரிந்து, கில்கிறிஸ்ட், சங்ககாரா, ஏபி டிவில்லயர்சை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பண்ட்
விக்கெட் கீப்பர்களில் உலக சாதனை புரிந்து, கில்கிறிஸ்ட், சங்ககாரா, ஏபி டிவில்லயர்சை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பண்ட் (AFP)

ரிஷப் பண்ட் சாதனை

டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியின்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்து வரும் ரிஷப் பண்ட் மூன்று கேட்ச்களை பிடித்துள்ளார். ரஹ்மனுல்லா குர்பாஸ், குல்படின் நயீப், நவீன் உல் ஹக் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி காரணமாக இருந்தார். இதன் மூலம் இந்த தொடரில் இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்துள்ளார்.

அத்துடன் இது சாதனையாகவும் அமைந்துள்ளது. இதற்கு முன்னர் டி20 உலகக் கோப்பை தொடர்களில் ஏபி டிவில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், குமார சங்ககாரா ஆகியோர் 9 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்தனர். இதுவே ஒரே டி20 உலகக் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பரால் வீழ்த்தப்பட்ட அதிக விக்கெட்டுகள் என்ற சாதனையில் இருந்து வந்த நிலையில், தற்போது ரிஷப் பண்ட் அதை முறியடித்துள்ளார்.

இன்னும், இந்தியாவுக்கு 2 சூப்பர் 8 சுற்று போட்டிகள் மீதமிருக்க, அதைத்தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிபோட்டியும் இருக்கும் நிலையில் பண்ட் புதிய மைல்கல் சாதனை புரிவதற்கான வாய்ப்பு உள்ளது.

இரண்டாவது டி20 உலகக் கோப்பை தொடர்

ரிஷப் பண்ட்க்கு இது இரண்டாவது டி20 உலகக் கோப்பை தொடராக உள்ளது. இதற்கு முன்னர் 2021இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடினார். 2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியிலும் அவர் இடம்பிடித்தபோதிலும், முதல் சாய்ஸாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் பண்ட்

பேட்டிங்கிலும் கலக்கல்

அத்துடன் பேட்டிங்கிலும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை தந்து வருகிறார் பண்ட். தற்போது அவர் மூன்றாவது பேட்ஸ்மேனாக புரொமோட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுவரை விளையாடியிருக்கும் 4 போட்டிகளில் 116 ரன்கள் எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 38.66, ஸ்டிரைக் ரேட் 131.81 என உள்ளது.

லீக் சுற்றில் அயர்லாந்துக்கு எதிராக 26 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தது, பாகிஸ்தான் அணிக்கு எதிராக 21 பந்துகளில் 42 ரன்கள் அடித்து அணியின் டாப் ஸ்கோரராக இருந்தார். இவரது இந்த இரு இன்னிங்ஸும் இந்திய அணி வெற்றியை பெற முக்கிய காரணமாக அமைந்தது.

பண்ட் கம்பேக்

கடந்த 2022 டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்க உயிர்பிழைத்தார் ரிஷப் பண்ட். இதன் பின்னர் அறுவை சிகிச்சை, மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு தனிப்பட்ட முயற்சியால் பயிற்சி எடுத்து சுமார் 18 மாதத்துக்கு பின்னர் ஐபிஎல் 2024 தொடரில் கம்பேக் கொடுத்தார். டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு பேட்டிங், பவுலிங்கில் சிறந்த பங்களிப்பை அளித்தார். இதன் விளைவாக டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான அணியில் விளையாடும் வாய்பை பெற்றார்.

தற்போது தனது பார்மை சிறப்பாக தொடர்ந்து வருவதுடன், சாதனையும் நிகழ்த்தியுள்ளார். இந்த தனது சூப்பர் 8 போட்டியில் வங்கதேசம் அணியை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டி நார்த் சவுண்டில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.