PAK captain: இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு! ஒரே பந்தில் ஹிட் அவுட், ரன் அவுட் - 31.7 விதியால் தப்பித்த பாகிஸ்தான் வீரர்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Pak Captain: இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு! ஒரே பந்தில் ஹிட் அவுட், ரன் அவுட் - 31.7 விதியால் தப்பித்த பாகிஸ்தான் வீரர்

PAK captain: இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு! ஒரே பந்தில் ஹிட் அவுட், ரன் அவுட் - 31.7 விதியால் தப்பித்த பாகிஸ்தான் வீரர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 22, 2024 08:00 AM IST

ஒரே பந்தில் ஹிட் அவுட், ரன் அவுட் ஆகியும் எம்சிசி ரூல்புக்கில் இருக்கும் 31.7 விதியால் நாட் அவுட் என தீர்ப்பு அளிக்கப்பட்டும் பாகிஸ்தான் வீரர் தப்பித்துள்ளார்.

ஒரே பந்தில் ஹிட் அவுட், ரன் அவுட், விதியால் தப்பித்த பாகிஸ்தான் வீரர்
ஒரே பந்தில் ஹிட் அவுட், ரன் அவுட், விதியால் தப்பித்த பாகிஸ்தான் வீரர்

அந்த வகையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணி கேப்டன் ஷான் மசூத்துக்கு அப்படியான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. ஒரே பந்தில் ஹிட் விக்கெட், ரன் அவுட் ஆகியிருக்கும் அவர் புதிய விதியால் நாட் அவுட் என தப்பித்துள்ளார். இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்கிற ரீதியில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த சம்பவம் யோர்க்சைர் vs லங்காஷயர் அணிக்கு எதிராக வைடாலிட்டி பிளாஸ்ட் போட்டியின் போது நடந்துள்ளது. அவுட் ஆனபோதிலும், ஆக்கப்பட்ட போதிலும் ஷான் மசூத் நாட் அவுட் என அறிவித்தது எம்சிசி ரூல் புக்கில் இடம்பிடித்திருக்கும் விதிமுறையை பின்பற்றியை நடந்துள்ளது.

ஒரே பந்தில் இரண்டு விக்கெட்டுகள்

இந்த போட்டியில் ஆட்டத்தின் 15வது ஓவரில், ஸ்டிரைக்கில் இருந்த மசூத் ஸ்கூப் ஷாட் ஆட முயன்றுள்ளார். அப்போது டீப் கிரீஸ் உள்ள சென்ற ஷாட் த்ரேடு மேன் திசையில் ஆடிய அவர், கட்டுப்பாட்டை இழந்து ஸ்டம்பில் கால் வைத்துவிட்டார். இது ஹிட் அவுட் என பவுலிங் அணி கொண்டாட நோபால் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே நான் ஸ்டிரைக்கரில் இருந்த ஜோ ரூட், மசூத் ஷாட் ஆடிய உடனே சிங்கிள் ரன் ஓட அழைத்துள்ளார். ஆனால் ஸ்டம்பில் கால் பட்டதால் ஹிட் விக்கெட் என்ற ஏமாற்றத்துடன் மெதுவாக ஓடி வந்த மசூத்தை எதிர் திசை க்ரீஸில் ரன் அவுட்டாக்கினர் பீல்டிங் அணியினர். ஆனால் இந்த இரண்டு விக்கெட்டும் கொடுக்கப்படவில்லை.

இதற்கான விநோத காரணமும் தெரிவிக்கப்பட்டது. அதாவது நோ பால் வீசி இருப்பதால் ஹிட் விக்கெட் கணக்கில் சேராது. ரன் அவுட் கொடுக்கப்படாததற்கு காரணமாக, மசூத் ரன் எடுக்க முயற்சிக்கவில்லை எனவும், ஹிட் விக்கெட் அவுட் என நினைத்து அவர் ரன் ஓடும் முயற்சியை கைவிட்டதாகவும் தெரிவித்து ரன்அவுட்டுக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

எம்சிசி ரூல்புக் 31.7படி சரி

MCC விதிப் புத்தகத்தில் உள்ள 31.7 விதியின் படி, ஒரு பேட்டர் தான் அவுட் என நினைத்து தவறான புரிதலுடன், அம்பயர் அவுட் கொடுக்கப்படாமல் க்ரீஸை விட்டு வெளியேறினால், அம்பயர் தலையிட்டு பேட்டர் திரும்பி அழைக்கலாம். அத்துடன் அந்த பந்தை டெட் பால் என சிக்னல் செய்யலாம், மேலும் எந்த ஒரு செயலையும் தடுக்கவும், பேட்டரை திரும்ப அழைக்கவும் முடியும் என கூறுகிறது.

இந்த விதியை எடுத்துக்காட்டி மசூத் திரும்ப பேட்டிங்குக்கு அழைக்கப்பட்டார். ஒரே பந்தில் இரண்டு முறை அவுட்டாகியும் மீண்டும் பேட் செய்யும் வாய்ப்பை பெற்ற மசூத்.

குழப்பம் ஏற்பட்டதால் நின்றேன்

நான் ஷாட் விளையாட முயற்சித்த போது, பந்து என் ஹெல்மெட் கிரில்லை தாக்கியது. என்னை பொறுத்தவரை, நான் சிகிச்சை பெறுவதற்காக நின்றேன். ஆனால் அப்போது குழப்பும் ஏற்பட்டது. ஜோ ரூட் ஓடியதால், நானும் ஓடினேன். நான் பந்தில் அடிபட்டது பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். இது டெட் பால் என கூறி, பிசியோவை அழைத்து சிகிச்சை பெறுகிறோமா என்றே தோன்றியது என்று போட்டி முடிவுக்கு பின்னர் ஷான் மசூத் தெரிவித்தார்.

அத்துடன், "இது நோபால் என்பது பற்றி ரூட் சொல்லவில்லை. ஆனாலும் அம்பயரின் முடிவுக்காக காத்திருந்தோம். பின்னர் போட்டி தொடர்ந்து நடைபெற்றது" என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.