Nitish Kumar Reddy: ‘சொன்னான்.. செய்தான்..’ அறை கதவை தட்டி கட்டியணைத்த குடும்பம்.. கண்ணீரில் நிதிஷ்குமார் ரெட்டி!
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Nitish Kumar Reddy: ‘சொன்னான்.. செய்தான்..’ அறை கதவை தட்டி கட்டியணைத்த குடும்பம்.. கண்ணீரில் நிதிஷ்குமார் ரெட்டி!

Nitish Kumar Reddy: ‘சொன்னான்.. செய்தான்..’ அறை கதவை தட்டி கட்டியணைத்த குடும்பம்.. கண்ணீரில் நிதிஷ்குமார் ரெட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 28, 2024 06:44 PM IST

நிதிஷ் குமார் ரெட்டி மெல்போர்னில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த பிறகு அவரது தந்தை, தாய் மற்றும் சகோதரி ஆகியோர் சந்தித்து, உணர்ச்சிவசப்பட்டனர்.

Nitish Kumar Reddy: ‘சொன்னான்.. செய்தான்..’ அறை கதவை தட்டி கட்டியணைத்த குடும்பம்.. கண்ணீரில் நிதிஷ்குமார் ரெட்டி!
Nitish Kumar Reddy: ‘சொன்னான்.. செய்தான்..’ அறை கதவை தட்டி கட்டியணைத்த குடும்பம்.. கண்ணீரில் நிதிஷ்குமார் ரெட்டி! (BCCI - X )

அறையை தட்டி அதிர்ச்சி தந்த குடும்பத்தார்

போட்டி முடிந்த பின், தன்னடைய விடுதி அறைக்குச் செல்லும் போது, வாசலில் நிதிஷ் குமார் ரெட்டி தனது தந்தை, தாய் மற்றும் சகோதரியை சந்தித்தார். நிதிஷின் ஹோட்டல் அறை வாசலுக்கு அவர்கள் வந்ததும், அவரது தந்தை உடைந்து நிதிஷ்குமாரை கட்டிப்பிடித்தார்.

குடும்பத்தார் அனைவரும் அவரை கட்டியணைத்து கண்ணீரில் வாழ்த்து சொல்ல, நிதிஷ் குமார் ரெட்டி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டதையும் காண முடிந்தது. ஆல்-ரவுண்டர் தனது தாயையும் சகோதரியையும் அன்புடன் கட்டிப்பிடித்தார்.

"நிதிஷ் இன்று மிகவும் நன்றாக விளையாடினாய். நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் நிறைய கஷ்டப்பட்டோம். இந்திய அணிக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்," என்று நிதிஷின் தந்தை முத்யாலு ரெட்டி கூறினார். மறுபுறம், நிதிஷின் சகோதரி தேஜஸ்வி, "இது அவருக்கு எளிதான பயணம் அல்ல. நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். அவர் சொன்னதை,  அவர் செய்தார்" என்று கூறினார்.

நிதிஷ் குமார் ரெட்டி இந்தியாவை மீட்டார்

இந்தியாவின் ஸ்கோர் 191/6 ஆக இருந்தபோது நிதிஷ் குமார் ரெட்டி 8வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். பின்னர் அவர் 105 ரன்கள் அடித்து இந்தியா போராட்டத்தை நடத்த உதவினார். அவர் வாஷிங்டன் சுந்தருடன் எட்டாவது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தார்.

நிதிஷ் குமார் ரெட்டி தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தபோது, ​​இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வர்ணனைப் பெட்டியில் இளைஞருக்கு எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தார். ஆடம் கில்கிறிஸ்ட், மைக்கேல் வாகன் மற்றும் சைமன் கேட்டிச் கூட நிதிஷின் சதத்தைப் பார்த்து பிரமித்தனர்.

நிதிஷ் குமார் ரெட்டி தனது ஐம்பதை முடித்த பிறகு பிரபலமான 'புஷ்பா' போஸை அடித்தார், பின்னர் அவர் தனது முதல் சதத்தை கொண்டாட 'பாகுபலி' மற்றும் 'சலார்' போஸை அடித்தார்.

3வது நாள் ஆட்ட நேர முடிவில், நிதிஷ் குமார் ரெட்டி இந்தியாவின் ஸ்கோரை 358/9 ஆக உயர்த்தினார். பார்வையாளர்கள் இன்னும் 116 ரன்கள் பின்தங்கியுள்ளனர்.

முன்னதாக, ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் அடித்த பிறகு ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் எடுத்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.