ஐபிஎல் 2025: விளையாட்டின் உணர்வை மீறிய நெக்ரா.. மீண்டும் தவறு செய்த பாண்டியா.. பிசிசிஐ அபராதம் விதிப்பு! நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: விளையாட்டின் உணர்வை மீறிய நெக்ரா.. மீண்டும் தவறு செய்த பாண்டியா.. பிசிசிஐ அபராதம் விதிப்பு! நடந்தது என்ன?

ஐபிஎல் 2025: விளையாட்டின் உணர்வை மீறிய நெக்ரா.. மீண்டும் தவறு செய்த பாண்டியா.. பிசிசிஐ அபராதம் விதிப்பு! நடந்தது என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated May 07, 2025 02:18 PM IST

இரண்டு முறை மழை குறுக்கீட்ட நிலையில், பல திருப்பங்களுடன் நடந்து முடிந்த மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்ன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பின்னர் குஜராத் அணி பயிற்சியாளர் ஆஷிஷ் நெக்ரா, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா விதிமீறலில் ஈடுபட்டதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளனர்.

Ahmedabad: Gujarat Titans' coach Ashish Nehra  during a practice session ahead of the Indian Premier League (IPL) 2025 cricket match between Gujarat Titans and Sunrisers Hyderabad, in Ahmedabad, Thursday, May 1, 2025. (PTI Photo/Arun Sharma)(PTI05_01_2025_000373A)
Ahmedabad: Gujarat Titans' coach Ashish Nehra during a practice session ahead of the Indian Premier League (IPL) 2025 cricket match between Gujarat Titans and Sunrisers Hyderabad, in Ahmedabad, Thursday, May 1, 2025. (PTI Photo/Arun Sharma)(PTI05_01_2025_000373A) (PTI)

ஐபிஎல் செய்திக்குறிப்பின்படி, குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாள் ஆஷிஷ் நெஹ்ரா போட்டியின் போது 'விளையாட்டின் உணர்வை' மீறினார் எனவும், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா மீண்டும் ஒருமுறை மெதுவாக ஓவர் வீசிய குற்றத்தில் (ஸ்லோ ஓவர் ரேட்) ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான போட்டிக்கு பிறகு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹார்திக் பாண்டியா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா உட்பட அவரது முழு அணியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐபிஎல் செய்திக்குறிப்பின்படி, ஆஷிஷ் நெஹ்ரா போட்டியின் போது 'விளையாட்டின் உணர்வை' மீறியதாகவும், ஹார்திக் பாண்ட்யா மீண்டும் ஒருமுறை மெதுவாக ஓவர் வீசிய குற்றத்தில் (ஸ்லோ ஓவர் ரேட்) ஈடுபட்டார் எனவும் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக இந்த விதிமீறல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக கேப்டன் பாண்டியா உள்பட மும்பை இந்தியன்ஸ் முழு அணியினருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது முறையாக பாண்டியா குற்றம்

இதுதொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மும்பை இந்தியன்ஸ் அணி வான்கடே மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 2025ஆம் ஆண்டு டாடா இந்தியன் பிரீமியர் லீக்கின் 56வது போட்டியின் போது குறித்த நேரத்தில் பந்து வீசி முடிக்காமல் மொதுவாக பந்து வீசிய குற்றம் செய்ததற்காக அணியின் கேப்டன் ஹார்திக் பாண்ட்யாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல்லின் குறைந்தபட்ச ஓவர் ரேட் குற்றங்கள் தொடர்பான நடத்தை விதிகளின் கீழ், இந்த சீசனில் அவரது அணியின் இரண்டாவது குற்றமாக இது இருந்ததால், பாண்டியாவுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இம்பேக்ட் வீரர் உள்பட மீதமுள்ள விளையாடும் XI வீரர்களுக்கும் தனித்தனியாக ரூ.6 லட்சம் அல்லது அவர்களின் போட்டி கட்டணத்தில் 25 சதவீதம், (எது குறைவானதோ) அபராதம் விதிக்கப்பட்டது.

நெக்ராவுக்கு அபராதம்

குஜராத் டைட்டன்ஸ் தலைமை பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, மேலும் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ஒரு தகுதி இழப்பு புள்ளியும் அளிக்கப்பட்டுள்ளது. பிரிவு 2.20 இன் கீழ் லெவல் 1 குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். இது விளையாட்டின் உணர்வுக்கு முரணான நடத்தை தொடர்பானது. இந்த குற்றச்சாட்டில் போட்டி நடுவரின் அனுமதியை ஏற்றுக்கொண்டார்.

லெவல் 1 மீறல்களுக்கான நடத்தை விதிமுறைகளின்படி, போட்டி நடுவரின் முடிவே இறுதியானது"

பல திருப்பங்கள் நிறைந்த போட்டி

முன்னதாக, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, வில் ஜாக்ஸின் அரை சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. ஜாக்ஸ் 53, சூர்யகுமார் யாதவ் 35, கார்பின் போஷ் 27 ரன்களும் எடுத்தனர். இந்த மூன்று பேரைத் தவிர, வேறு எந்த மும்பை பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கத்தை எட்ட முடியவில்லை. குஜராத் அணிக்காக சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் தவிர பவுலிங் செய்த மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்

மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 156 ரன்களை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் 43, ஜோஸ் பட்லர் 30, ருதர்போர்டு 28 ரன்கள் எடுத்தனர். இரண்டு முறை இந்த போட்டி மழையால் தடைப்பட்ட நிலையில், ஆட்டம் குஜராத் பக்கம், மும்பை பக்கம் என மாறி மாறி திருப்பியது.

இதையடுத்து, DLS விதிமுறைப்படி குஜராத் 19 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஸ்கோரை ஆட்டத்தின் கடைசி பந்தில் சேஸ் செய்த குஜராத் பரபரப்புக்கு மத்தியில் த்ரில் வெற்றியை பெற்றது.