சச்சினை காட்டிலும் கோலியின் காத்திருப்பு குறைவுதான்.. நிம்மதியுடன் இருப்பார் - சேவாக் சொன்ன விஷயம்
ஐபிஎல் கோப்பைக்காக விராட் கோலி 18 ஆண்டுகள் காத்திருந்தது, சச்சின் டெண்டுல்கரின் 2011 உலகக் கோப்பை வெற்றியுடன் ஒப்பிட்டுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்தர் சேவாக்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் ஐபிஎல் கோப்பையை வென்றதன் மூலம் விராட் கோலியின் நீண்ட கால ஐபிஎல் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. ஐபிஎல் போட்டிகள் 2008ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரராக விராட் கோலி உள்ளார்.
இதையடுத்து ஆர்சிபி அணி இதற்கு முன்னர் மூன்று முறை இறுதிப் போட்டியில் விளையாடிய நிலையில் மூன்று முறையும் தோல்விகளைச் சந்தித்தது. இதைத்தொடர்ந்து ஒரு வழியாக கடந்த செவ்வாய்க்கிழமை அகமதாபாத்தில் நடந்த போட்டியில் கோப்பை வறட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது.
இறுதிப் போட்டியில் ஆர்சிபியின் இன்னிங்ஸில் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அந்த அணி சார்பாக அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாகவும் இருந்தார். கோலியின் ஆட்டம் அதிரடியாக இல்லாவிட்டாலும், பொறுப்பான பேட்டிங் ஆர்சிபி அணியை 20 ஓவர்களில் 190/9 என்ற வலுவான ஸ்கோரை எட்ட உதவியது.
