ஆர்சிபி ரசிகர்கள் அன்புக்கு நெருக்கமாக எந்த கோப்பையும் கிடையாது.. டி20 கிரிக்கெட்டில் ஓய்வு ஏன்? மனம் திறந்த கோலி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஆர்சிபி ரசிகர்கள் அன்புக்கு நெருக்கமாக எந்த கோப்பையும் கிடையாது.. டி20 கிரிக்கெட்டில் ஓய்வு ஏன்? மனம் திறந்த கோலி

ஆர்சிபி ரசிகர்கள் அன்புக்கு நெருக்கமாக எந்த கோப்பையும் கிடையாது.. டி20 கிரிக்கெட்டில் ஓய்வு ஏன்? மனம் திறந்த கோலி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 03, 2025 02:24 PM IST

ஆர்சிபி ரசிகர்களின் அன்புக்கு நெருக்கமாக எந்த கோப்பையும் கிடையாது. டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின்னர் ஓய்வு அறிவிக்க முக்கிய காரணமே இளம் வீரர்களுக்கு போதுமான கால அவகாசம் தர வேண்டும் என்பது தான் என்று விராட் கோலி பேசியுள்ளார்.

ஆர்சிபி ரசிகர்கள் அன்புக்கு நெருக்கமாக எந்த கோப்பையும் கிடையாது.. டி20 கிரிக்கெட்டில் ஓய்வு ஏன்? மனம் திறந்த கோலி
ஆர்சிபி ரசிகர்கள் அன்புக்கு நெருக்கமாக எந்த கோப்பையும் கிடையாது.. டி20 கிரிக்கெட்டில் ஓய்வு ஏன்? மனம் திறந்த கோலி (AFP)

இரண்டு வருட சுழற்சி தேவை

இதுகுறித்து கோலி கூறியதாவது, "கோப்பை வென்ற பிறகு எனக்கு எந்த விதத்திலும் நிலைமை மாறிவிடப்போவதில்லை. மாறாக புதிய வீரர்கள் குழு தயாராக இருப்பதை அறிவேன். அவர்களுக்கு போதிய நேரம் தேவை என்பதை முழுமையாகப் புரிந்துகொண்டுதான் டி20 போட்டிகளில் இருந்து விலக முடிவு எடுத்தேன்.

ஒவ்வொரு வீரர்களும் தங்களை பரிணமித்துகொள்ள, அழுத்தத்தை கையாள, உலகின் பல்வேறு பகுதிகளில் விளையாட வேண்டும். உலகக் கோப்பை வரும்போது தாங்கள் முழுவதுமாக தயாராக இருப்பதாக உணரும் அளவுக்கு போதுமான ஆட்டங்களை விளையாடுவதற்கு அவர்கள் இரண்டு வருட சுழற்சி தேவை.

ஆர்சிபி ரசிகர்களின் அன்பு

தொடர்ந்து ஆர்சிபி இதுவரை கோப்பை வெல்லாமல் இருப்பது குறித்த கேள்விக்கு, "ஆர்சிபி ரசிகர்களின் அன்புக்கு

ஐபிஎல் தொடர் தொடங்கிய 2008 முதல் தற்போது வரை விராட் கோலி ஆர்சிபி அணியில் விளையாடி வருகிறார். 18 வருடங்களாக ஒரே அணியில் விளையாடி வரும் வீரராக கோலி திகழ்கிறார். 2013 சீசன் முதல் 2021 வரை 8 ஐபிஎல் தொடர்களில் ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டார் கோலி. 2016 தொடரில் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்று, ஆர்சிபி அணியை மூன்றாவது முறையாக ரன்னர் அப் ஆக்கினார்.

இந்த சீசனில் இதுவரை விளையாடியிருக்கும் 10 போட்டிகளில் 443 ரன்கள் அடித்திருக்கும் கோலி, ஆரஞ்சு தொப்பிக்கான ரேஸில் உள்ளார். அத்துடன் ஆர்சிபி அணி இந்த சீசனில் ராஜத் பட்டிதார் கேப்டன்சியில் சிறப்பாக செய்லபட்டு வருகிறது. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் தற்போதைய நிலையில் 3வது இடத்தில் உள்ளது.

கோலி ஓய்வு

கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிப்போட்டியில் தென் ஆப்பரிக்காவை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது இந்தியா. ரோஹித் ஷர்மா தலைமையில் இந்தியா இரண்டாவது டி20 கோப்பை வென்றது.

இந்த வெற்றியின் மகிழ்ச்சியோடு, டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கோலி. இளைஞர்களுக்கு வழிவிடும் விதமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிவித்தார். கோலியை தொடர்ந்து மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.

விராட் கோலி இதுவரை 125 டி20 போட்டிகளில் விளையாடி, 4,188 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 48.69 ஆகும். அத்துடன் 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 59 பந்துகளுக்கு 76 ரன்கள் எடுத்த கோலி, ஆட்ட நாயகன் விருதையும் வென்றார். ஓய்வு அறிவிப்பின் போது 36 வயதாகி இருந்த கோலி, 2014 மற்றும் 2016 டி20 உலகக் கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.