பெங்களுரு கூட்ட நெரிசல்.. சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மனம் உடைந்து போய்யுள்ளேன்! விராட் கோலி
ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, சின்னசாமி மைதானத்துக்கு வெளியே நடந்திருக்கும் விஷயங்களை கேள்விப்பட்டதுடன் மனம் உடைந்து போனதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்துக்கு வெளியே புதன்கிழமை நடைபெற்ற ஆர்சிபி அணியின் முதல் ஐபிஎல் கோப்பை வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 33 பேர் வரை காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
மனவேதனை அடைந்தேன்
ஆர்சிபி ரசிகர்களுக்கு சிறப்பு மிக்கதாக இருக்க வேண்டிய இந்த நாள், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் தவறிவிட்ட நிலையில் துயரமான நாளாக மாறியது. கூட்ட நெரிசல் குறித்து ஆர்சிபியின் அதிகாரப்பூர்வ அறிக்கையை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்த விராட் கோலி மனவேதனை அடைந்திருப்பதாக கூறியுள்ளார்.
பெங்களூருவில் ஆர்சிபியின் உள்ளூர் மைதானத்துக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, வெற்றி கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டன. சின்னசாமி ஸ்டேடியத்துக்குள் நிரம்பியிருந்த கூட்டத்துக்கு முன்னால் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதரும், கோலியும் மட்டுமே வெற்றி கோப்பையை வெளிப்படுத்துவதற்கு முன்பு உரை நிகழ்த்தினார்கள்.