ஐபிஎல் 2025: இப்போது 300 ரன்களையும் ஐபிஎல்லில் கடக்கலாம்; நாங்களும் அதை செய்ய முடியும் - ரிங்கு சிங்
கடந்த வருடம் பஞ்சாப் கிங்ஸ் 262 ரன்களை சேஸ் செய்தது. இந்த சீசனில் எல்லா அணிகளும் வலுவாக உள்ளன. எந்த அணியினராலும் 300 ரன்கள் அடைய முடியும். நாங்களும் அதை செய்ய முடியும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பினிஷரான ரிங்கு சிங் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2025 தொடரில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்களில் ஒருவராக எதிர்பார்க்கப்பட்டவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பினிஷராக இருந்து வரும் ரிங்கு சிங். ஆனால் இவர் இதுவரை இந்த சீசனில் பெரிதாக ரன்குவிப்பில் ஈடுபடாமலும், அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை அளிக்காமல் ஏமாற்றியுள்ளார்.
இதையடுத்து இவர் பார்முக்கு திரும்புவத கொல்கத்தா அணிக்கு முக்கியமான விஷயமாக கருதப்படும் நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
'ஜென் போல்ட்' நட்சத்திரமான ரிங்கு சிங், ஜியோஹாட்ஸ்டாருக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில், தனது பினிஷர் பங்கு மற்றும் உடல் பிட்னஸ் பற்றிய அனுபவங்களை பகிர்ந்தார்:
"நான் பொதுவாக 5 அல்லது 6வது இடத்தில் பேட் செய்கிறேன். உத்தர பிரதேசம் அணிக்காக விளையாடும் போதும் மற்றும் ஐபிஎல் தொடரிலும் இதையே செய்துள்ளேன். எனவே இது எனக்கு பழக்கமான ஒன்றுதான்.
தோனியிடம் அடிக்கடி பேசுவேன்
14 போட்டிகள் உள்ள ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டுமானால், உடல் பிட்னஸை நன்றாக பராமரித்து, சரியாக மீண்டெடுக்க வேண்டும். இதில் அதிக கவனம் செலுத்துகிறேன். நான் தோனியுடன் அடிக்கடி பேசுவேன். அவர் எனக்கு அமைதியாக இருந்து, போட்டியின் நிலைக்கு ஏற்ப விளையாடச் சொல்வார். அமைதியாக இருந்தால், எல்லாம் இயற்கையாக சரியாகிவிடும்.
300 என்பது சாத்தியமே
ஐபிஎல் விளையாடத் தொடங்கியதிலிருந்து நான் தொடர்ந்து கற்றுக்கொண்டு வருகிறேன். ரசல் இறுதி ஓவர்களில் எப்படி ஆடுகிறார், எப்படி தனது உடலை பயன்படுத்தி, ஆற்றலையும், சக்தியையும் உருவாக்கி வெளிப்படுத்துகிறார் என்பதைக் கவனமாக பார்க்கிறேன். அவற்றை பார்த்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்கிறேன்.
ஐபிஎல் போட்டிகள் இப்போது 300 ரன்கள் அடையும் நிலைக்கு வளர்ந்துவிட்டது. நிச்சயம் இது முடியும். கடந்த வருடம் பஞ்சாப் கிங்ஸ் 262 ரன்களை சேஸ் செய்தது. இந்த சீசனில் எல்லா அணிகளும் வலுவாக உள்ளன. எந்த அணியினராலும் 300 ரன்கள் அடைய முடியும். நாங்களும் அதை செய்ய முடியும்" என்று கூறினார்.
ஐபிஎல் 2025 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஐபிஎல் 2025 தொடரில் 8 போட்டிகள் விளையாடி இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 வெற்றி, 5 தோல்விகளை சந்தித்துள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய 8 போட்டிகளிலும் விளையாடியிருக்கும் ரிங்கு சிங் 133 ரன்கள் அடித்துள்ளது. அவரது அதிகபட்ச ஸ்கோர் 38 ஆகும். 33.25 சராசரி வைத்திருக்கும் ரிங்கு சிங் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் டாப் பேட்ஸ்மேன்களில் 6வது இடத்தில் உள்ளார். இவரது ஸ்டிரைக் ரேட் 146.15 ஆக உள்ளது.
டாடா ஐபிஎல் ரிவெஞ்ச் வீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் போட்டி ஏப்ரல் 26 இன்று இரவு நடைபெறுகிறது. இந்த போட்டியை ஜியோஸ்டார் மற்று0ம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரலையில் காணலாம். மேலும் இவ்வாறான புதிய தலைமுறை டாடா ஐபிஎல் வீரர்களின் சிறப்பு பேட்டிகளை பார்வையிட, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 (SD மற்றும் HD) மற்றும் ஜியோஹாட்ஸ்டாரில் இணைந்திருங்கள்

டாபிக்ஸ்