ஐபிஎல் 2025: உள்ளூர் மைதானத்தில் முதல் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் ஆர்சிபி.. பழிதீர்க்க காத்திருக்கும் ராஜஸ்தான்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: உள்ளூர் மைதானத்தில் முதல் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் ஆர்சிபி.. பழிதீர்க்க காத்திருக்கும் ராஜஸ்தான்

ஐபிஎல் 2025: உள்ளூர் மைதானத்தில் முதல் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் ஆர்சிபி.. பழிதீர்க்க காத்திருக்கும் ராஜஸ்தான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 24, 2025 06:00 AM IST

ஐபிஎல் 2025: இரண்டு தொடர் தோல்வி, அதற்கு முன் ஆர்சிபி அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் தோல்வி பழிதீர்க்கும் விதமாக ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்குகிறது. உள்ளுர் மைதானத்தில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்திருக்கும் ஆர்சிபி இன்றைய போட்டியில் முதல் வெற்றி கணக்கை தொடங்க போராடும் என எதிர்பார்க்கலாம்

உள்ளூர் மைதானத்தில் முதல் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் ஆர்சிபி.. பழிதீர்க்க காத்திருக்கும் ராஜஸ்தான்
உள்ளூர் மைதானத்தில் முதல் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பில் ஆர்சிபி.. பழிதீர்க்க காத்திருக்கும் ராஜஸ்தான் (PTI)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு (ஆர்சிபி) முந்தைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முந்தைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி அருகே வந்து தோல்வியுற்றது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக போட்டியை டை செய்து, சூப்பர் ஓவரில் வெற்றி பறிபோனது. அதேபோல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 2 ரன்னில் தோல்வியை தழுவியது. இரண்டு தொடர் தோல்விக்கு பிறகு வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறது.

இந்த சீசனில் ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இடையிலான முந்தைய போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றது. எனவே இந்த தோல்விக்கும் பதிலடி தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதேபோல் ஆர்சிபி அணியும் உள்ளூர் மைதானமான சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த சீசனில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியுற்றுள்ளது. எனவே உள்ளூர் மைதானத்தில் முதல் வெற்றிக்கான தேடலில் களமிறங்குகிறது

ஸ்டார் வீரர்கள்

ஆர்சிபி அணியில் கோலி, சால்ட், படிக்கல், பட்டிதார், ஜித்தேஷ் ஷர்மா என டாப் 5 பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் உள்ளார்கள். பவுலிங்கில் ஜோஷ் ஹசில்வுட், புவனேஷ்வர் குமார் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் பவுலர்களாக திகழ்கிறார்கள். ஆல்ரவுண்டராக க்ருனால் பாண்டியா சிறப்பாக செயல்படுகிறார். பேட்டிங், பவுலிங், ஆல்ரவுண்டர் சரி விகிதத்தில் பொருந்திய அணியாக ஆர்சிபி உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெயஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளார்கள். பவுலிங்கில் ஹசரங்கா, ஜோப்ர் ஆர்ச்சர்,சந்தீப் ஷர்மா, தீக்சனா ஆகியோர் கன்சிஸ்டன்டாக செயல்படுகிறார்கள். இருப்பினும் ஆல்ரவுண்டர் இல்லாதது ராஜஸ்தான் அணிக்கு பெரிய குறையாக உள்ளது.

ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை

ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இதுவரை 33 போட்டிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. ஆர்சிபி அணி 16, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. மூன்று போட்டிகளுக்கு முடிவு இல்லை. இரு அணிகளுக்கு இடையிலான முந்தைய மோதலில் ஆர்சிபி வெற்றி பெற்றிருந்தாலும், கடந்த 2024 சீசனில் இரண்டு மோதல்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே வெற்றி பெற்றிருந்தது.

பிட்ச் ரிப்போர்ட்

சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முந்தைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. இருப்பினும் கடந்த சில நாள்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பிட்ச் தன்மையும் வழக்கம்போல் பேட்டிங்குக்கு சாதமாக மெல்ல மாறியுள்ளதாக கூறப்படுகிறது. பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியான இங்கு இந்த முறை பெரிய ஸ்கோர்கள் குவிக்கப்படாமல் இருந்து வருகிறது. இருப்பினும் சேஸிங் அணிக்கு சாதகமான சூழ்நிலை இருப்பதால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்றே தெரிகிறது.

ஆர்சிபி உத்தேச அணி: ஃபில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்

இம்பேக்ட் வீரர்: சுயாஷ் ஷர்மா

ராஜஸ்தான் ராயல்ஸ்: வைபவ் சூர்யவன்ஷி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), 6 ஷிம்ரோன் ஹெட்மேயர், சுபம் துபே, வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மதிஷா தீக்சனா, துஷார் தேஷ்பாண்டே

இம்பேக்ட் வீரர்கள்: சந்தீப் ஷர்மா, ஆகாஷ் மத்வால்

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.