ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்கு 5வது வெற்றி.. எளிதாக இலக்கை எட்டி ஜெயித்தது!-சொந்த மண்ணில் ராசியில்லாத ஆர்சிபி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்கு 5வது வெற்றி.. எளிதாக இலக்கை எட்டி ஜெயித்தது!-சொந்த மண்ணில் ராசியில்லாத ஆர்சிபி

ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்கு 5வது வெற்றி.. எளிதாக இலக்கை எட்டி ஜெயித்தது!-சொந்த மண்ணில் ராசியில்லாத ஆர்சிபி

Manigandan K T HT Tamil
Published Apr 19, 2025 12:18 AM IST

ஐபிஎல் 2025: பஞ்சாப் சார்பில் பிரியான்ஷ் ஆர்யா 16 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களில் நடையைக் கட்டினார். விக்கெட் கீப்பர் இங்லிஷ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். நேஹல் வதேரா சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார்.

ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்கு 5வது வெற்றி.. எளிதாக இலக்கை எட்டி ஜெயித்தது!-சொந்த மண்ணில் ராசியில்லாத ஆர்சிபி
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்கு 5வது வெற்றி.. எளிதாக இலக்கை எட்டி ஜெயித்தது!-சொந்த மண்ணில் ராசியில்லாத ஆர்சிபி (AP)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 34வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. கால தாமதம் ஏற்பட்டதால், மேட்ச்சின் ஓவர்கள் 14ஆக குறைக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவர்களில் 95 ரன்கள் சேர்த்தது ஆர்சிபி. 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் விளையாடியது. 

முன்னதாக, மழையால் ஆட்டம் கால தாமதம் ஆன போதிலும் ரசிகர்கள் திரும்பிச் செல்லாமல் அரங்கிலேயே ஆர்வத்துடன் காத்திருந்தனர். சிலர் சோகமாக காணப்பட்டனர். ஆனால், மேட்ச் தொடங்கியதும் உற்சாகம் அடைந்தனர்.

ஆர்சிபி அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் பிலிப் சால்ட் 4 ரன்களும், விராட் கோலி 1 ரன்னிலும் நடையைக் கட்டி அதிர்ச்சி கொடுத்தனர். கேப்டன் ரஜத் படிதார் மட்டும் நிதானமாக விளையாடி 23 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். மிடில் ஆர்டரில் களம் புகுந்த டிம் டேவிட் சிறப்பாக ஆடி அரை சதம் விளாசினார். அவரால் ஆர்சிபி அணி இந்த ஸ்கோரை எட்ட முக்கியப் பங்களித்தது. அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சன், சஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹர்ப்ரீத் பிரார் 2 விக்கெட்டுகளை வீழ்த்த, சேவியர் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

பஞ்சாப் சார்பில் பிரியான்ஷ் ஆர்யா 16 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 13 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களில் நடையைக் கட்டினார். விக்கெட் கீப்பர் இங்லிஷ் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். நேஹல் வதேரா சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தார். அவர் 33 ரன்கள் எடுத்தார்.

இந்த மேட்ச்சில் ஜோஷ் ஹேஸில்வுட்டுக்கு 3 விக்கெட் கிடைத்தது. புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், "நாங்கள் முதலில் பந்து வீசுவோம். இது சேஸிங் செய்ய ஒரு நல்ல மைதானம், இது மழையால் தடைபட்ட விளையாட்டு, ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளன, ஆடுகளம் எப்படி இருக்கும் என்பது பற்றிய நியாயமான யோசனை இருக்கும், மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக ஸ்டாய்னிஸ் வருகிறார், ஹர்பிரீத் பிரார் உள்ளே வருகிறார். எங்களுக்கு சரியான வீரர்கள் சரியான இடத்தில், இருக்க வேண்டும்" என்று கூறினார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, யாஷ் தயாள்.

பஞ்சாப் கிங்ஸ்:

ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், ஜோஷ் இங்லிஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்கோ யான்சென், ஹர்பிரீத் பிரார், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.