ஐபிஎல் 2025: முதலில் பைனலுக்கு செல்லப் போவது யார்? பஞ்சாப் கிங்ஸ் - ஆர்சிபி பலப்பரிட்சை
இந்த சீசனில் முதல் அணியாக பைனலுக்கு செல்லப்போவது யார் என பஞ்சாப் கிங்ஸ் - ஆர்சிபி அணி பலப்பரிட்சை செய்ய இருக்கின்றன. இரு அணிகளும் சமபலம் பொருந்திய அணிகளாக இருக்கின்றன.

ஐபிஎல் 2025: முதலில் பைனலுக்கு செல்லப் போவது யார்? பஞ்சாப் கிங்ஸ் - ஆர்சிபி பலப்பரிட்சை
ஐபிஎல் 2025 தொடரில் லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில் ப்ளேஆஃப் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இதில் முதலாவதாக குவாலிபயர் 1 போட்டி பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு (ஆர்சிபி) அணிகளுக்கு இடையே முல்லான்பூர் மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இந்த இரு அணிகளும் லீக் சுற்று முடிவில் 19 புள்ளிகளை பெற்றிருந்த போதிலும், ரன் ரேட் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் முதல் இடத்திலும், ஆர்சிபி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் 2014க்கு பிறகு 11 ஆண்டுகள் கழித்து குவாலிபயர் சுற்று போட்டிகளில் விளையாடுகிறது. ஆர்சிபி அணியை பொறுத்தவரை தொடர்ந்து இரண்டாவது முறையாக ப்ளேஆஃப்புக்கு தகுதி பெற்றுள்ளது.