ஐபிஎல் 2025: பிரியான்ஷ், பிரப்சிம்ரன் அதிரடி.. கொல்கத்தா கோட்டையில் பஞ்சாப் 201 ரன்கள் குவிப்பு
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: பிரியான்ஷ், பிரப்சிம்ரன் அதிரடி.. கொல்கத்தா கோட்டையில் பஞ்சாப் 201 ரன்கள் குவிப்பு

ஐபிஎல் 2025: பிரியான்ஷ், பிரப்சிம்ரன் அதிரடி.. கொல்கத்தா கோட்டையில் பஞ்சாப் 201 ரன்கள் குவிப்பு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Apr 26, 2025 09:50 PM IST

பிரியான்ஷ், பிரப்சிம்ரன் அதிரடியால் பஞ்சாப் கிங்ஸ் 201 ரன்கள் குவித்துள்ளது. கொல்கத்தா பவுலர்களில் அரோரா, வருண், ரசல் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஐபிஎல் 2025: பிரியான்ஷ், பிரப்சிம்ரன் அதிரடி.. பஞ்சாப் 201 ரன்கள் குவிப்பு
ஐபிஎல் 2025: பிரியான்ஷ், பிரப்சிம்ரன் அதிரடி.. பஞ்சாப் 201 ரன்கள் குவிப்பு (Surjeet Yadav)

பஞ்சாப் கிங்ஸ் தனது முந்தைய போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியுற்றது. இரு அணிகளும் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்கியுள்ளன.

இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மேக்ஸ்வெல், அஸ்மதுல்ல உமர்சாய் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா அணியில் ரமனாதீப் சிங்குக்கு பதிலாக சேட்டன் சக்காரியா சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ரோவ்மன் பவல் இந்த சீசனில் முதல் போட்டியில் களமிறங்குகிறார்.

பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 83, பிரியான்ஷ் ஆர்யா 69 ரன்கள் எடுத்துள்ளனர்.

கொல்கத்தா பவுலர்களில் வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வருண் சக்கரவர்த்தி, ஆண்ட்ரே ரசல் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

பிரியான்ஷ் - பிரப்சிம்ரன் அதிரடி

பஞ்சாப் கிங்ஸ்க்கு ஓபனர்களான பிரியான்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 120 ரன்கள் சேர்த்தது.

பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் கிங்ஸ் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்தது. ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகிய இருவரும் பவுண்டரி, சிக்ஸர்கள் என மாறி மாறி அடித்தனர். 27 பந்துகளில் முதல் ஆளாக அரைசதத்தை பூர்த்தி செய்தார் ஆர்யா. அதன் பின்னரும் அதிரடியை தொடர்ந்த அவர் 35 பந்துகளில் 69 ரன்கள் அடித்து முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடித்தார்.

ஆர்யா அவுட்டான பிறகு அதிரடியை தொடர்ந்த பிரப்சிம்ரன் சிங் 38 பந்துளில் அரைசதத்தை எட்டினார். அதன் பின்னரும் விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்ட அவர் 49 பந்துகளில் 89 ரன்களில் அவுட்டனார். தனது இன்னிங்ஸில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் அடித்தார்.

கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த ஷ்ரேயாஸ் 25 ரன்கள் எடுத்தார். ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் 7 ரன்னில் நடைய கட்டியதோடு மற்றொரு ஏமாற்றமான இன்னிங்ஸை வெளிப்டுத்தினார்.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.