ஐபிஎல் 2025: கொல்கத்தா துல்லிய பவுலிங்.. சரிந்த பஞ்சாப் பேட்டிங்..111 ரன்களில் பொட்டலம்
ஐபிஎல் 2025: ஓபனர்கள் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் அதிரடி தொடக்கத்தை தந்த போதிலும் பவர்ப்ளே முடிவதற்குள்ளாகவே அவுட்டாகினர். அதன் பின்னர் கொல்கத்தா பவுலர்களின் துல்லிய பவுலிங்கில் சிக்கி பஞ்சாப் பேட்டிங் சரிந்து 111 ரன்களில் பொட்டலம் செய்யப்பட்டது.

கொல்கத்தா துல்லிய பவுலிங்.. சரிந்த பஞ்சாப் பேட்டிங்..111 ரன்களில் பொட்டலம் (Surjeet Yadav)
ஐபிஎல் 2025 தொடரின் 31வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே முல்லான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்கு முன் பஞ்சாப் கிங்ஸ் 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6 போட்டிகளில் 3 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் தனது முந்தைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தனது முந்தைய போட்டியில் சிஎஸ்கே அணியை உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் வைத்து வீழ்த்தியது.
