ஐபிஎல் 2025: திடீரென அணைக்கப்பட்ட விளக்குகள்.. கைவிடப்பட்ட டெல்லி-பஞ்சாப் மேட்ச்.. காரணம் என்ன?
பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. பிராயன்ஷ் ஆர்யா 70 ரன்கள் அடித்து சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ஐபிஎல் 2025: பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வரும் நிலையில், தர்மசாலா மைதானத்தில் நடக்கும் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் மேட்ச் ரத்து செய்யப்பட்டது. மைதானத்தின் விளக்குகள் அணைக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், ஐபிஎல் 2025 போட்டி "தொழில்நுட்பக் கோளாறு" காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர் தெரிவித்தார்.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக டாஸ் இரவு 8.20 மணியளவில் தான் போடப்பட்டது. ஆனால், ஓவர்கள் குறைக்கப்படவில்லை. 8.30 மணிக்கு மேட்ச் தொடங்கியது.
பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்
பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 1 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது. பிராயன்ஷ் ஆர்யா 70 ரன்கள் அடித்து சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.