ஐபிஎல் 2025: 3 சிக்ஸர்கள்.. பயத்தை காட்டிய தோனி! பணிய வைத்த பஞ்சாப்.. சிஎஸ்கேவுக்கு மற்றொரு தோல்வி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: 3 சிக்ஸர்கள்.. பயத்தை காட்டிய தோனி! பணிய வைத்த பஞ்சாப்.. சிஎஸ்கேவுக்கு மற்றொரு தோல்வி

ஐபிஎல் 2025: 3 சிக்ஸர்கள்.. பயத்தை காட்டிய தோனி! பணிய வைத்த பஞ்சாப்.. சிஎஸ்கேவுக்கு மற்றொரு தோல்வி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 08, 2025 11:40 PM IST

ஐபிஎல் 2025: கடைசி கட்டத்தில் மூன்று சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து பஞ்சாப் அணிக்கு பயத்தை காட்டிய தோனி துர்தஷ்டவசமாக அவுட்டானார். கடந்த போட்டிகளை காட்டிலும் சிறப்பாக செயல்பட்டபோதிலும் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக நான்காவது தோல்வியை பெற்றுள்ளது.

3 சிக்ஸர்கள்.. பயத்தை காட்டிய தோனி! பணிய வைத்த பஞ்சாப்.. சிஎஸ்கேவுக்கு மற்றொரு தோல்வி
3 சிக்ஸர்கள்.. பயத்தை காட்டிய தோனி! பணிய வைத்த பஞ்சாப்.. சிஎஸ்கேவுக்கு மற்றொரு தோல்வி

பஞ்சாப் கிங்ஸ் முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்த சீசனில் முதல் முறையாக உள்ளூர் மைதானமான முல்லான்பூரில் களமிறங்கிய பஞ்சாப், முதல் தோல்வியையும் சந்தித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் முந்தைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் வைத்து தோல்வியுற்றது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி பெறும் ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது.

இரு அணிகளும் தங்களது முந்தைய போட்டியில் தோல்வியை பெற்றிருப்பதால், வெற்றி பாதைக்கு திரும்புவதற்கான போட்டியாக அமைந்திருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் என இரு அணிகளும் முந்தைய போட்டியில் களமிறங்கிய அதே அணியுடன் விளையாடின.

முதலில் பேட் செய்த பஞ்சாப் 219 ரன்கள் குவித்த நிலையில், இந்த இலக்கை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்

சிஎஸ்கே சேஸிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், பிரியான்ஷ் ஆர்யா, ஷஷாங்க் சிங் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. இந்த பெரிய இலக்கை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக டேவான் கான்வே 69, ஷிவம் துபே 42, தோனி 27 ரன்கள் அடித்தனர். பஞ்சாப் பவுலர்களில் பெர்குசன் 2, கிளென் மேக்ஸ்வெல், யஷ் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

நல்ல தொடக்கம்

இந்த சீசனில் பவர்ப்ளே ஓவர்களில் நல்ல தொடக்கம் இல்லை என்று இருந்த குற்றச்சாட்டை சிஎஸ்கே அணி தவிடுபொடி ஆக்கியது. ஓபனர்களான ரச்சின் ரவீந்திரா - டேவான் கான்வே ஆகியோர் இணைந்து அதிரடியான தொடக்கத்தை தந்தனர். பவர்ப்ளே முடிவில் சிஎஸ்கே அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக பேட் செய்த ரச்சின் ரவீந்திரா, பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரிலேயே அவுட்டானார். 23 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த அவர் 6 பவுண்டரிகளை அடித்தார்.

கான்வே - துபே பார்ட்னர்ஷிப்

இதைத்தொடர்ந்து பேட் செய்ய வந்த ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன் அடித்து அவுட்டாகி ஏமாற்றினார். பின்னர் கான்வே - துபே ஜோடி இணைந்து பஞ்சாப் பவுலர்களுக்கு எதிராக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து 89 ரன்கள் சேர்த்தனர்.

கான்வே அரைசதமடித்த நிலையில், துபே அவ்வப்போது சிக்ஸர்கள், பவுண்டரிகள் விளாசினார். சிறப்பாக விளையாடி வந்த துபே 42 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

பயத்தை காட்டிய தோனி

பின்னர் களமிறங்கிய தோனி தொடக்கத்திலேயே அதிரடியை வெளிப்படுத்த தொடங்கினார். மறுமுனையில் இருந்த கான்வேயால் பெரிய ஷாட் ஆட முடியாத நிலையில் ரிட்டையர் அவுட் ஆகி வெளியேறினார். கான்வே 49 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அப்போது தேவைப்படும் ரன்ரேட் 25 ரன்கள் மேல் இருந்தது.

இந்த நேரத்தில் ஸ்டிரைக்கில் இருந்த தோனி அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் முதல் பந்திலேயே தோனி துர்தஷ்டவசமாக அவுட்டானார். அத்துடன் சிஎஸ்கே தோல்வியும் உறுதியானது.

இந்த வெற்றிக்கு பின்னர் பஞ்சாப் கிங்ஸ் 4 போட்டிகளில் 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே தொடர்ந்து 9வது இடத்தில் நீடிக்கிறது.