ஐபிஎல் 2025: காலாவதியான பழைய பார்முலா.. சிஎஸ்கேவின் புதிய திட்டம் என்ன? பஞ்சாப்புக்கு எதிராக பலப்பரிட்சை
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: காலாவதியான பழைய பார்முலா.. சிஎஸ்கேவின் புதிய திட்டம் என்ன? பஞ்சாப்புக்கு எதிராக பலப்பரிட்சை

ஐபிஎல் 2025: காலாவதியான பழைய பார்முலா.. சிஎஸ்கேவின் புதிய திட்டம் என்ன? பஞ்சாப்புக்கு எதிராக பலப்பரிட்சை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 08, 2025 07:00 AM IST

ஐபிஎல் 2025: இம்பேக்ட் வீரராக ஷிவம் துபே, தோனியின் பினிஷ் என்கிற சிஎஸ்கேவின் கேம் பிளான் கணிக்ககூடியதாகவிட்டது. காலாவதியான இந்த பார்மூலாவை மாற்றி அமைத்து புதிய திட்டத்துடன் களமிறங்க வேண்டிய சூழலில் நல்ல பார்மில் இருந்து வரும் பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிராக பலப்பரிட்சை செய்ய இருக்கிறது.

காலாவதியான பழைய பார்முலா.. சிஎஸ்கேவின் புதிய திட்டம் என்ன? பஞ்சாப்புக்கு எதிராக பலப்பரிட்சை
காலாவதியான பழைய பார்முலா.. சிஎஸ்கேவின் புதிய திட்டம் என்ன? பஞ்சாப்புக்கு எதிராக பலப்பரிட்சை

பஞ்சாப் கிங்ஸ் முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்த சீசனில் முதல் முறையாக உள்ளூர் மைதானமான முல்லான்பூரில் களமிறங்கிய பஞ்சாப், முதல் தோல்வியையும் சந்தித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் முந்தைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் வைத்து தோல்வியுற்றது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி பெறும் ஹார்ரிக் தோல்வியாக அமைந்தது.

இரு அணிகளும் தங்களது முந்தைய போட்டியில் தோல்வியை பெற்றிருப்பதால், வெற்றி பாதைக்கு திரும்புவதற்கான வியூகத்துடனும், திட்டங்களுடனும் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம்

காலாவதியான பார்மூலா

2018 சீசனுக்கு பிறகு 180 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ய அணி என்ற மோசமான சாதனையை தொடர்ந்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த சீசனிலும் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சேஸிங் செய்த சிஎஸ்கே 180க்கு மேற்பட்ட ரன்களை சேஸ் செய்யாமல் தோல்வியுற்றுள்ளது.

அதேபோல், இம்பேக்ட் வீரராக ஷிவம் துபே, தோனியின் பினிஷ் என சிஎஸ்கே அணி வழக்கமாக கடைப்பிடிக்கும் பார்முலா காலாவதியாகிவிட்டது. எதிரணிக்கு வியூகம் அமைப்பதற்கான சிறந்த வழியாகவும் அமைந்துள்ளது. அத்துடன் இந்த சீசனில் சரியான காம்பினேஷன் அமையாமல் தவித்து வருகிறது.

வெற்றி காம்பினேஷன் வைத்து விளையாடும் ஒரே அணியாக இருந்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த சீசனில் நான்கு போட்டிகளிலும் அணியில் மாற்றங்கள் செய்த போதிலும் ஒர்க் அவுட் ஆகாமல் உள்ளது. எனவே வழக்கமான பார்மூலாவில் இருந்த விலகி, புதிய திட்டத்துடன் அணி களமிறங்க வேண்டிய சூழலில் உள்ளது.

பேட்டிங்கில் இளம் வீரர்களான ஷேக் ரஷித், ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோர் மீதும், பவுலிங்கில் அன்ஷுல் கம்போஜ் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இவர்களில் ஒருவர் இந்த போட்டியில் களமிறக்கப்படலாம் என்றே தெரிகிறது.

பேட்டிங், பவுலிங்கில் முன்னேற்றம் தேவை

பஞ்சாப் அணியில் நிலையான ஆட்டத்தை அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், நேகல் வதிரா ஆகியோர் மட்டும் வெளிப்படுத்தி வருகிறார்கள். மற்றவர்கள் விரைவாக அவுட்டாக பெவிலியன் திரும்புவது அணிக்கு தலைவலி தரும் விஷயமாக உள்ளது. ஆல்ரவுண்டர்களாக இருந்து வரும் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனவே பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டிய சூழலில் பஞ்சாப் கிங்ஸ் உள்ளது.

பவுலிங்கை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மட்டும் சிறப்பாக செயல்படுகிறார். எனவே அவரை மட்டும் நம்பி இல்லாமல் மற்ற வீரர்களும் பங்களிப்பு தந்தால் மட்டுமே எதிரணிக்கு நெருக்கடி தர முடியும். ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக இருந்து யஸ்வேந்திர சஹால், பஞ்சாப் அணியின் பிரதான் ஸ்பின்னராக இருந்தபோதும் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் 4 ஓவர்கள் முழுமையாக வீசாத அளவில் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அடி வாங்குகிறார். எனவே அவரும் தனது திறமையை வெளிக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இதுவரை

இந்த இரு அணிகளும் இதுவரை 30 போட்டிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 16 முறை, பஞ்சாப் கிங்ஸ் 14 முறை வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக இந்த இரு அணிகளுக்கு இடையிலான மோதலில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்றது. அத்துடன் இந்த சிஎஸ்கே - பஞ்சாப் கிங்ஸ் மோதிக்கொண்ட கடைசி 5 போட்டிகளில் சிஎஸ்கே ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

பிட்ச் நிலவரம்

ஐபிஎல் போட்டிகள் நடக்கும் மைதானத்தில் சற்று பெரிதாக இருக்கும் மைதானங்களில் ஒன்றாக முல்லான்பூர் இருந்து வருகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு உள்ளூர் மைதானமாக இருந்தாலும் ராசி இல்லாத மைதானமாகவே உள்ளது. இங்கு 6 போட்டிகள் விளையாடி ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.

பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளமாக இருந்தாலும், ஸ்பின்னர்களுக்கு கை கொடுக்கும் விதமாக மொதுவாக செயல்படும் என கணிக்கப்பட்டுள்ளது. பெரிய ஸ்கோர் குவிப்பது கடினம் எனவும் கூறப்படுகிறது.