Shreyas Iyer: பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கோப்பையை உயர்த்துவதே என் இலக்கு! பஞ்சாபி கொண்டாட்டம் வேண்டும் – ஷ்ரேயாஸ் ஐயர்
Shreyas Iyer: ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பை வெல்லாமல் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கோப்பையை உயர்த்துவதே என் இலக்கு. இது வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாக இருக்கும். ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்து, கொண்டாட்டத்தில் ஈடுபட வைக்க விரும்புகிறேன் என்று ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கோப்பையை உயர்த்துவதே என் இலக்கு! பஞ்சாபி கொண்டாட்டம் வேண்டும் – ஷ்ரேயாஸ் ஐயர்
கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கும் ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர், மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியுடன் தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடந்த ஐபிஎல் 2024 சீசனில் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர் ஜியோஸ்டாரில் ஒளிபரப்பான சூப்பர்ஸ்டார்ஸ் ஆன் ஜியோஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில், ஐபிஎல் 2025 சீசனில் தனது இலக்கு, முதல் ஐபிஎல் அனுபவம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.