ஐபிஎல் 2025: பண்டியா, திலக் வர்மா போராட்டம் வீண்.. கடைசி ஓவரில் விழுந்த 3 விக்கெட்டுகளை.. மும்பையை வீழ்த்திய ஆர்சிபி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: பண்டியா, திலக் வர்மா போராட்டம் வீண்.. கடைசி ஓவரில் விழுந்த 3 விக்கெட்டுகளை.. மும்பையை வீழ்த்திய ஆர்சிபி

ஐபிஎல் 2025: பண்டியா, திலக் வர்மா போராட்டம் வீண்.. கடைசி ஓவரில் விழுந்த 3 விக்கெட்டுகளை.. மும்பையை வீழ்த்திய ஆர்சிபி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 07, 2025 11:48 PM IST

ஐபிஎல் 2025: திலக் வர்மா - ஹர்திக் பாண்டியா ஜோடி இணைந்து அதிரடியில் மிரட்டிபோதிலும் அடுத்தடுத்து அவுட்டானது திருப்புமுனையாக அமைந்தது. கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆர்சிபி பவுலர் க்ருணால் பாண்டியா அணியை வெற்றி பெற செய்தார்.

பண்டியா, திலக் வர்மா போராட்டம் வீண்.. கடைசி ஓவரில் விழுந்த 3 விக்கெட்டுகளை.. மும்பையை வீழ்த்திய ஆர்சிபி
பண்டியா, திலக் வர்மா போராட்டம் வீண்.. கடைசி ஓவரில் விழுந்த 3 விக்கெட்டுகளை.. மும்பையை வீழ்த்திய ஆர்சிபி (Hindustan Times)

ராயல் சேலஞர்ஸ் (ஆர்சிபி) அணி தனது முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸ் அணி முந்தைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இந்த இரு அணிகளும் தோல்வியில் இருந்து வெற்றி பாதைக்கும் திரும்பும் விதமாக இந்த போட்டி அமைந்து இருந்தது.

ஆர்சிபி அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியது. மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் திரும்பியுள்ளனர். காயத்தில் இருந்து மீண்டு, ஐபிஎல் 2025 சீசனின் முதல் போட்டியில் களமிறங்கினார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆர்சிபி 221 ரன்கள் எடுத்த நிலையில், இந்த இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் 209 ரன்கள் எடுத்து 12 ரன்களில் தோல்வியை தழுவியது.

மும்பை இந்தியன்ஸ் சேஸிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. இதனால் ஆர்சிபி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக திலக் வர்மா 56, ஹர்திக் பாண்டியா 42 ரன்கள் எடுத்தனர். ஆர்சிபி பவுலர்களில் க்ருணால் பாண்டியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹசில்வுட், யஷ் தயாள் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். புவனேஷ்வர் குமார் ஒரு விக்கெட் எடுத்தார்.

டாப் ஆர்டர் சொதப்பல்

222 ரன்கள் என மிக பெரிய இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் அமையாமல் போனது. இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா தனது பாணியில் அதிரடியுடன் தொடங்கினார். இருப்பினும் நீண்ட நேர நிலைத்து நிற்காமல் அடித்து ஆட முயன்று 17 ரன்களில் அவுட்டானார் மற்றொரு ஓபனரான ரிக்கெல்டன் 17 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்.

இதன் பின்னர் வந்த வில் ஜேக்ஸ் 22 ரன்கள் எடுத்த தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பவர்ப்ளே முடிவில் மும்பை இந்தியன்ஸ் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது. அதிரடியாக பேட் செய்யக்கூடிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 28 ரன்கள் அடித்து மெதுவான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார்.

திலக் வர்மா - பாண்டியா பார்ட்னர்ஷிப்

அணியின் ஸ்கோர் 12 ஓவரில் 99 ரன்கள் இருந்த போது திலக் வர்மா - பாண்டியா ஜோடி சேர்த்தனர். இவர்கள் இருவரும் ஆர்சிபி பவுலர்களுக்கு எதிராக அதிரடி தாக்குதலை வெளிப்படுத்தினர். அடுத்தடுத்து பவுண்டரி, சிக்ஸர்கள் என மாறி மாறி விளாசினர்.

இதனால் தேவைப்படும் ரன் ரேட் மளமளவென குறைந்து, மும்பை இந்தியன்ஸ் இலக்கை நோக்கி வேகமாக சென்றது. பேட்டிங்கில் பொளந்து கட்டிய திலக் வர்மா 29 பந்துகளில் 56 ரன்கள் அடித்து பெரிய ஷாட் அடித்து அவுட்டானார்.

மறுமுனையில் பாண்டியாவும் அதிரடியில் மிரட்டிய நிலையில் 15 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார். ஹசில்வுட் பந்தில் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் லிவிங்ஸ்டன் வசம் சிக்கினார். திலக் வர்மா - பாண்டியா ஜோடி இணைந்து 7 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளை அடித்து 89 ரன்களை சேர்த்தனர்.

கடைசி ஓவரில் திருப்பம்

ஆட்டத்தின் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட கைவசம் 4 விக்கெட்டுகளை வைத்திருந்தது மும்பை இந்தியன்ஸ். அந்த ஓவரை வீசிய க்ருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி, 6 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். மிக பெரிய ஸ்கோர் என்பதால் ஆர்சிபி பவுலர்களும் ரன்களை வாரி வழங்கினர். இந்த போட்டியில் பெற்ற வெற்றியால் ஆர்சிபி அணி தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியும் 8வது இடத்திலேயே உள்ளது.