ஐபிஎல் 2025: ‘அல்லு சில்லு செதறனுடா’ -MI பந்துவீச்சை சிதறடித்த மிட்செல் மார்ஷ், மார்க்ரம்!
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: ‘அல்லு சில்லு செதறனுடா’ -Mi பந்துவீச்சை சிதறடித்த மிட்செல் மார்ஷ், மார்க்ரம்!

ஐபிஎல் 2025: ‘அல்லு சில்லு செதறனுடா’ -MI பந்துவீச்சை சிதறடித்த மிட்செல் மார்ஷ், மார்க்ரம்!

Manigandan K T HT Tamil
Published Apr 04, 2025 09:16 PM IST

ஐபிஎல் 2025: லக்னோவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் 16 வது போட்டியில் ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (MI) கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஐபிஎல் 2025: ‘அல்லு சில்லு செதறனுடா’ -MI பந்துவீச்சை சிதறடித்த மிட்செல் மார்ஷ், மார்க்ரம்!
ஐபிஎல் 2025: ‘அல்லு சில்லு செதறனுடா’ -MI பந்துவீச்சை சிதறடித்த மிட்செல் மார்ஷ், மார்க்ரம்! (PTI)

டாஸ் வென்ற மும்பை கேப்டன் பாண்டியா, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்தது லக்னோ. ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களம்புகுந்த மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம் ஆகியோர் அருமையாக விளையாடி அரை சதம் விளாசினர். மார்ஷ் 60 ரன்கள், மார்க்ரம் 53 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தனர். ஆயுஷ் பதோனி 30 ரன்கள் விளாசினார். கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். பூரன் 12 ரன்களிலும், அப்துல் சமத் 4 ரன்களிலும் நடையைக் கட்டினர்.

ஹார்திக் பாண்டியா சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது முதல் 5 விக்கெட்டுகள் இந்த மேட்ச்சில் இருந்துதான் வந்தது. விக்னேஷ் புதூர் 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். மிட்செல் சாண்ட்னருக்கு இந்த மேட்ச்சில் விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இல், மும்பை இந்தியன்ஸ் இதுவரை ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது - கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு (கே.கே.ஆர்) எதிரான சொந்த மண்ணில் கிடைத்த வெற்றி - அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) அணிகளுக்கு எதிராக இரண்டு தோல்விகளை சந்தித்தது. இந்த மேட்ச்சிலும் ஜெயிக்குமா என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கேப்டன் பாண்டியா பேச்சு

"நாங்கள் முதலில் பந்து வீசப் போகிறோம். சிறந்த ஆடுகளம் போல் தெரிகிறது. எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. பனித்துளி பின்னர் வரலாம். சேஸிங் நல்லது என்று நினைத்தேன். ஆடுகளம் பற்றி பேச விரும்பவில்லை என்று ஒரு குழுவில் நாங்கள் பேசியுள்ளோம் என்று நினைக்கிறேன். நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட இங்கு வந்துள்ளோம். என்பதுதான் எங்களது பேச்சாக இருக்க வேண்டும். மேற்பரப்புகளைப் பற்றி பேச வேண்டாம்.  சரியான திட்டங்களை செயல்படுத்துவது மற்றும் புத்திசாலித்தனமாக இருப்பது இதுவே எங்களின் நோக்கம். நிறைய ரன்கள் குவிக்கப்படுகின்றன. கிரிக்கெட் சூழ்நிலை சார்ந்தது. ரோஹித்துக்கு முழங்காலில் அடிபட்டது. அவர் இந்த மேட்ச்சில் விளையாட முடியவில்லை. ஜஸ்பிரித் விரைவில் திரும்ப வேண்டும்" என்று டாஸ் வென்ற பின்னர் ஹார்திக் பாண்டியா கூறினார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த், 18-வது சீசனில் விளையாடிய மூன்று ஆட்டங்களில் இரண்டில் தோல்வியடைந்த போதிலும் அணி "மிகவும் நம்பிக்கையுடன்" உள்ளது என்று கூறினார்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (பிளேயிங் லெவன்): 

எய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாகூர், திக்வேஷ் சிங் ரதி, ஆகாஷ் தீப், ஆவேஷ் கான்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இம்பாக்ட் சப்ஸ்: ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், ஷாபாஸ் அகமது, எம் சித்தார்த், ஆகாஷ் சிங்.

மும்பை இந்தியன்ஸ்: வில் ஜாக்ஸ், ரியான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், ராஜ் பாவா, மிட்செல் சாண்ட்னர், ட்ரெண்ட் போல்ட், அஸ்வனி குமார், தீபக் சாஹர், விக்னேஷ் புதூர்.

மும்பை இந்தியன்ஸ் இம்பாக்ட் சப்ஸ்: திலக் வர்மா, கார்பின் போஷ், ராபின் மின்ஸ், சத்யநாராயண ராஜு, கரண் சர்மா.