ஐபிஎல் 2025: ரஹானே அதிரடி அரை சதம்.. க்ருணால் பாண்டியா, ஜோஷ் ஹேஸில்வுட் தரமான பவுலிங்.. கேகேஆர் 174 ரன்கள்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: ரஹானே அதிரடி அரை சதம்.. க்ருணால் பாண்டியா, ஜோஷ் ஹேஸில்வுட் தரமான பவுலிங்.. கேகேஆர் 174 ரன்கள்

ஐபிஎல் 2025: ரஹானே அதிரடி அரை சதம்.. க்ருணால் பாண்டியா, ஜோஷ் ஹேஸில்வுட் தரமான பவுலிங்.. கேகேஆர் 174 ரன்கள்

Manigandan K T HT Tamil
Published Mar 22, 2025 09:13 PM IST

ஐபிஎல் 2025: பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக ஆடிய அஜிங்க்யா ரஹானே முன்னணியில் இருந்து வழிநடத்தினார், அவர் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினார்.

ஐபிஎல் 2025: ரஹானே அதிரடி அரை சதம்.. க்ருணால் பாண்டியா, ஜோஷ் ஹேஸில்வுட் தரமான பவுலிங்.. கேகேஆர் 174 ரன்கள்
ஐபிஎல் 2025: ரஹானே அதிரடி அரை சதம்.. க்ருணால் பாண்டியா, ஜோஷ் ஹேஸில்வுட் தரமான பவுலிங்.. கேகேஆர் 174 ரன்கள் (AFP)

குவின்டன் டி காக், சுனில் நரேன் ஆகியோர் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். டி காக் 4 ரன்கள் எடுத்திருந்த முதல் ஓவரிலேயே ஹேஸில்வுட் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். பின்னர் கேப்டன் அஜிங்க்ய ரஹானே களம் புகுந்தார். அவர் 31 பந்துகளில் அரை 56 ரன்கள் எடுத்தார். அப்போது க்ருணால் பாண்டியா பந்துவீச்சில் ரஷிக் சலாமிடம் கேட்ச் ஆனார். 6 ஃபோர்ஸ், 4 சிக்ஸர்களை விளாசினார் ரஹானே. இவரும் நரேனும் பார்ட்னர்ஷிப்பில் அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்த உதவினர். ஆனால், க்ருணால் பாண்டியா அந்த கூட்டணியை உடைத்தார். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் விக்கெட்டையும் க்ருணால் காலி செய்தார். சுனில் நரேனும் 44 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.

க்ருணால் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 29 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். இது ஆர்சிபிக்காக அவரது முதல் மேட்ச் ஆகும். அதேபோல், ஜோஷ் ஹேஸில்வுட் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை சுருட்டினார்.

டாஸ் வென்ற ரஜத் படிதார்

டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

டாஸ் போடும் போது படிதார் கூறுகையில், “பிட்ச் கடினமாக உள்ளது. ஆர்சிபியை வழிநடத்துவது ஆச்சரியமாக இருக்கிறது மற்றும் சிறந்த வீரர்களிடமிருந்து கற்றுக்கொள்ள சிறந்த வாய்ப்பு. கடந்த 10-15 நாட்களாக நாங்கள் சரியான தயாரிப்புகளை செய்துள்ளோம். நாங்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் செல்கிறோம்” என கூறினார்.

மறுபுறம், அஜிங்க்யா ரஹானே, “இந்த அணியை வழிநடத்துவது ஒரு மரியாதை. எங்கள் தயாரிப்பு நன்றாக இருந்தது, முக்கிய குழு ஒரே மாதிரியாக இருந்தது. முதலில் சிறப்பாக பேட்டிங் செய்து பின்னர் டிஃபென்ட் செய்வேன் என்று எதிர்பார்க்கிறேன். இது வீரர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவது மற்றும் அவர்களை ஒரு யூனிட்டாக விளையாட அனுமதிப்பது பற்றியது. நாங்கள் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடி வருகிறோம்” என்றார்.

ஐபிஎல் 2025 தொடக்க ஆட்டத்திற்கு முன், பிரமாண்டமான தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஷாருக் கான் தொகுத்து வழங்கினார் மற்றும் ஸ்ரேயா கோஷல், கரண் அவுஜ்லா மற்றும் திஷா பதானி போன்றவர்கள் ஈடன் கார்டன் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

ஆர்சிபி பிளேயிங் லெவன்

விராட் கோலி, பிலிப் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரசிக் தார் சலாம், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.

கேகேஆர் பிளேயிங் லெவன்

குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரின்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.