ஐபிஎல் 2025: தொடர் மழை..ஒரு ஓவருடன் தடைப்பட்ட ஆட்டம்.. பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி
தொடர் மழை பெய்த நிலையில், ஒரு ஓவர் வீசப்பட்ட நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தடைப்பட்டது. இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி அளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025 44வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்த ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் பஞ்சாப் கிங்ஸ் 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வியுடன் 7வது இடத்திலும் இருந்தது.
பஞ்சாப் கிங்ஸ் தனது முந்தைய போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியுற்றது. இரு அணிகளும் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களமிறங்கின.
இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மேக்ஸ்வெல், அஸ்மதுல்லா உமர்சாய் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா அணியில் ரமனாதீப் சிங்குக்கு பதிலாக சேட்டன் சக்காரியா சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ரோவ்மன் பவல் இந்த சீசனில் முதல் போட்டியில் களமிறங்கியுள்ளார்.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 201 ரன்கள் குவித்த நிலையில், இந்த ஸ்கோரை சேஸ் செய்த கொல்கத்தா 7 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. தொடர் மழை நீடித்த நிலையில் போட்டி கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.
போட்டி ரத்து
முன்னதாக, டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. இதையடுத்து சேஸிங்கில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1 ஓவரில் 7 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்த நிலையில் ஆட்டம் தடைபட்டது.
மழை தொடர்ந்து நீடித்த நிலையில் ஆட்டம் 5 ஓவராக குறைக்கப்படும் என கூறப்பட்டது. ஆனாலும் மழை நிலையில் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
போட்டி மழையால் ரத்தான நிலையில் பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி அளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் புள்ளிப்பட்டியல்
இந்த போட்டி முடிவுக்கு பிறகு பஞ்சாப் கிங்ஸ் 11 போட்டிக்கு பிறகு நான்காவது இடத்துக்கு முன்னேறியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 புள்ளிகளை பெற்று தொடர்ந்து 7வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி டாப் 4 இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் அதிரடி காட்டிய பிரப்சிம்ரன் சிங் 83, பிரியான்ஷ் ஆர்யா 69 ரன்கள் எடுத்தனர். வைபவ் அரோரா 2, வருண் சக்கரவர்த்தி, ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
