ஐபிஎல் 2025: அனைவருக்கும் நன்மை செய்யும் முடிவு.. பின் வரிசையில் பேட் செய்ய இதுதான் காரணம்.. தோனி சொன்ன விஷயம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: அனைவருக்கும் நன்மை செய்யும் முடிவு.. பின் வரிசையில் பேட் செய்ய இதுதான் காரணம்.. தோனி சொன்ன விஷயம்

ஐபிஎல் 2025: அனைவருக்கும் நன்மை செய்யும் முடிவு.. பின் வரிசையில் பேட் செய்ய இதுதான் காரணம்.. தோனி சொன்ன விஷயம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Mar 29, 2025 06:22 PM IST

ஐபிஎல் 2025: சில வீரர்களை புரொமோட் செய்வதால் அணி பாதிக்கப்படும் என்பது கிடையாது. எனவே, எல்லோரும் அந்த பாத்திரத்தையும் பொறுப்பையும் செய்கிறார்கள், அது எனக்கு சில அழுத்தத்தைக் குறைக்கிறது என்றால் ஏன் அதை செய்யக்கூடாது என பின்வரிசையில் களமிறங்குவது குறித்து தோனி கூறியுள்ளார்.

அனைவருக்கும் நன்மை செய்யும் முடிவு.. பின் வரிசையில் பேட் செய்ய இதுதான் காரணம்.. தோனி சொன்ன விஷயம்
அனைவருக்கும் நன்மை செய்யும் முடிவு.. பின் வரிசையில் பேட் செய்ய இதுதான் காரணம்.. தோனி சொன்ன விஷயம்

197 ரன்கள் ரன்கள் என்ற மிக பெரிய இலக்கை சேஸ் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எம்எஸ் தோனி 9வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.

சிஎஸ்கே வெற்றி பெற 28 பந்துகளில் 98 ரன்கள் தேவை என்ற நிலையில் தான் தோனி களமிறங்கினார். இந்த சூழலில் தோல்வி என்பது சிஎஸ்கேவுக்கு கிட்டத்தட்ட உறுதியானது. இதையடுத்து போட்டியின் முடிவுக்கு பின் தோனி களமிறங்கிய இடம் குறித்து ரசிகர்கள் அதிருப்தியும், விமர்சனத்தையும் வெளிப்படுத்தினர். தோனி முன்னரே வந்திருந்தால் அணியை வெற்றியை நோக்கி எடுத்து சென்றிருப்பார் அல்லது தோல்வி அடைந்தாலும் வெற்றி அருகிலாவது அணியின் ஸ்கோரை கொண்டு வந்திருப்பார். இப்படியான வாய்ப்பு இருக்கும் போது ஏன் அவர் பின் வரிசையில் களமிறங்கினார் என பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்த சூழ்நிலையில், ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் ஜியோஹட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில், பின் வரிசையில் களமிறங்குவது ஏன் என்பது குறித்து தோனி விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் இந்த நிலைமை மாறாது எனவும் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு தரும் முயற்சி

இதுகுறித்து தோனி ஐபிஎல் 2025 சீசன் தொடங்குவதற்கு முன்னர் ஜியோஸ்டாருக்கு அளித்த பேட்டியில், கடந்த ஆண்டில் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் வீரர்களுக்கான தேர்வு லிஸ்டில் ஷிவம் துபே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இருந்தனர். எனவே அவர்கள் முன் வரிசையில் களமிறங்க அதிக வாய்ப்பு தர விரும்பினேன். எனக்கு மேலே உள்ள பேட்ஸ்மேன்கள் தங்கள் வேலையைச் செய்யவில்லை. இதனால் அணிக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று அர்த்தமல்லை என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, என் முழங்காலில் பிரச்னை இருந்தது. ஆனால் அதை சமாளிக்க முடிந்தது. அதுமட்டுமில்லாமால், டி20 உலகக் கோப்பைக்கு தொடருக்கான தேர்வும் இருந்தது. ஜடேஜா, ஷிவம் துபே ஆகியோர் டி20 அணிக்கு தேர்வாகும் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தனரு. நான் அவர்களை போல் போட்டியாளராக இல்லை. அதனால அவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும்னு.

எனக்கு அழுத்தம் குறைகிறது

அவர்கள் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள். வீரர்களை புரொமோட் செய்வதால் அணி பாதிக்கப்படும் என்பது கிடையாது. எனவே, எல்லோரும் அந்த பாத்திரத்தையும் பொறுப்பையும் செய்கிறார்கள், அது எனக்கு சில அழுத்தத்தைக் குறைக்கிறது என்றால் ஏன் அதை செய்யக்கூடாது. அதுதான் அதன் பின்னணியில் இருந்த சிந்தனை. அவர்களுடைய பேட்டிங் அவ்வளவு சிறப்பாக இல்லாவிட்டால், அல்லது அவர்கள் தேவையான ரன்களைப் பெறவில்லை என்றால், அந்த சிந்தனை மாறியிருக்கும். எனவே அனைவருக்கும் நல்லது செய்யும் முடிவாக இருந்தால், அதை ஏன் செய்ய கூடாது என்று கூறியுள்ளார்.

மின்னல் வேக ஸ்டம்பிங்

ஸ்டம்புகளுக்குப் பின்னால் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் தோனி, இந்த சீசனில் சிஎஸ்கே விளையாடியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து மிரட்டியுள்ளார். அத்துடன் முதல் போட்டியில் அணியின் வெற்றிக்கு 4 ரன்கள் மட்டும் தேவை என்ற நிலையில் களமிறங்கிய தோனி 2 பந்துகளை எதிர்கொண்டு ரன்கள் எதுவும் எடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து இரண்டாவது போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக அணியின் வெற்றி பறிபோன சமயத்தில் பேட் செய்ய வந்தபோதிலும், வழக்கமான தனது பாணியில் அதிரடியை வெளிப்படுத்திய தோனி, 3 பவுண்டரி, 2 சிக்ஸர் என 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார்.