ஐபிஎல் 2025: பரபரப்பான ஆட்டத்துக்கு நடுவே கருண் நாயருக்கும் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கும் இடையே நடந்தது என்ன?
ஐபிஎல் 2025 இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான டெல்லி அணியின் மோதலின் போது கருண் நாயர் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா இடையே மோதல் ஏற்படட்து. கருண் நாயரின் மன்னிப்பையும் நிராகரித்தார் பும்ரா. என்ன நடந்தது?

ஐபிஎல் 2025: பரபரப்பான ஆட்டத்துக்கு நடுவே கருண் நாயருக்கும் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கும் இடையே நடந்தது என்ன? (AFP)
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் டெல்லி அணியில் அதிரடியாக விளையாடிய கருண் நாயருக்கும், மும்பை பவுலர் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு இடையே காரசாரமான உரையாடல் நடந்தது. இவர்களுக்கு நடுவே மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா சமரசம் செய்ய வந்தார்.
கருண் நாயர் எதிர்பாராதவிதமாக பும்ரா மீது மோதியதாக தெரிகிறது. ஆனால், பும்ரா அதை ஏற்கவில்லை. அவர் வேண்டுமென்றே செய்தார் என பும்ரா கருதியதாகத் தெரிகிறது. கருண் நாயர் மன்னிப்பு கேட்டும் பும்ரா விளக்கத்தை ஏற்க மறுத்தார். அதைத் தொடர்ந்து கருண் நாயர், ஹர்திக் பாண்டியாவை சந்தித்து சம்பவம் குறித்து விளக்கினார்.
மறுபக்கம் கருண் செய்தது குறித்து ஜாலியாக ரோஹித் சர்மாவும் ரியாக்ஷன் கொடுத்தார்.
