ஐபிஎல் 2025: மூன்று பேர் மட்டும் இரட்டை இலக்க ஸ்கோர்.. சீட்டுகட்டு போல் சரிந்த ராஜஸ்தான் பேட்டிங்! டாப் இடத்தில் குஜராத்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: மூன்று பேர் மட்டும் இரட்டை இலக்க ஸ்கோர்.. சீட்டுகட்டு போல் சரிந்த ராஜஸ்தான் பேட்டிங்! டாப் இடத்தில் குஜராத்

ஐபிஎல் 2025: மூன்று பேர் மட்டும் இரட்டை இலக்க ஸ்கோர்.. சீட்டுகட்டு போல் சரிந்த ராஜஸ்தான் பேட்டிங்! டாப் இடத்தில் குஜராத்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 09, 2025 11:52 PM IST

ஐபிஎல் 2025: 218 என்கிர மிக பெரிய சேஸை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டிங் சொதப்பலாக அமைந்தது. அந்த அணியில் மூன்று பேர் மட்டுமே இரட்டை இலக்கத்தில் ஸ்கோர் செய்தனர். குஜராத் அணி நான்காவது வெற்றியுடன் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மூன்று பேர் மட்டும் இரட்டை இலக்க ஸ்கோர்.. சிட்டுகட்டு போல் சரிந்த ராஜஸ்தான் பேட்டிங்! டாப் இடத்தில் குஜராத்
மூன்று பேர் மட்டும் இரட்டை இலக்க ஸ்கோர்.. சிட்டுகட்டு போல் சரிந்த ராஜஸ்தான் பேட்டிங்! டாப் இடத்தில் குஜராத் (Surjeet Yadav)

இந்த போட்டி தொடங்கும் முன் குஜராத் டைட்ன்ஸ் 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த. ராஜஸ்தான் ராயல்ஸ் 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 7வது இடத்தில் இருந்தது.

இந்த போட்டியில் குஜராத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஹசரங்காவுக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் பவுலர் ஃபசல்ஹாக் ஃபரூக்கி சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 217 ரன்கள் குவித்த நிலையில், இதை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங்

முன்னதாக, டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்ய, சாய் சுதர்சன் அரைசதம் மற்றும் படலர், ஷாருக்கான் அதிரடியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. இதையடுத்து மிக பெரிய இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 19.2 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால் குஜராத் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்துக்கு முன்னேறியது.

ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷமிரான் ஹெட்மேயர் 52, சஞ்சு சாம்சன் 41, ரியான் பராக் 26 ரன்கள் எடுத்தனர். இவர்கள் மூவரை தவிர மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்திலேயே ரன்கள் அடித்தனர்.

குஜராத் பவுலர்களில் பிரசித் கிருஷ்ணா 3, ரஷித்கான் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது சிராஜ், அர்ஷத் கான், இம்பேக்ட் வீரராக களமிறங்கிய குல்வந்த் கெஜ்டோலியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

பேட்டிங் சொதப்பல்

218 ரன்கள் என்ற பெரிய இலக்கை விரட்டியபோது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி ஓபனர் யஷஸ்வி ஜெயஸ்வால் 6 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். இவரை தொடர்ந்து நிதிஷ் ராணா ஒரு ரன்னில் நடையை கட்டினார்.

அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை விழுந்த நிலையில் சஞ்சு சாம்சன் - ரியான் பராக் ஜோடி சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து சிறப்பாக பேட் செய்து வந்த சாம்சன் பவர்ப்ளே முடிந்த அடுத்த ஓவரிலேயே ரியான் பராக் 14 பந்துகளில் 26 ரன்கள் விரைவாக அடித்து அவுட்டானார். பின்னர் வந்த துருவ் ஜூரல் 5 ரன்னில் நடையை கட்டினார்.

முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட்டான நிலையில் ராஜஸ்தான் ராயல் தடுமாறியது. அப்போது ஹெட்மேயருடன் இணைந்து பார்டனர்ஷிப் அமைத்தார் சாம்சன். பொறுப்புடன் பேட் செய்து வந்த அவர் 28 பந்துகளில் 41 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார்.

ஹெட்மேயர் போராட்டம்

ராஜஸ்தான் அணி முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ஷிபம் துபேவும் 1 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். களத்தில் இருந்த ஷிமரான் ஹெட்மேயர் மட்டும் ஒற்றை ஆளாக போராடி வந்தார். ஆனால் அவருக்கு கம்பெனி கொடுக்க யாரும் இல்லாத நிலையில் 29 பந்துகளில் அரைசதமடித்த அவர், 52 ரன்கள் அடித்து அவுட்டானார்.

குஜராத் பவுலர்கள் அனைவரும் விக்கெட்டுகள்

ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தரும் விதமாக குஜராத் பவுலர்கள் அனைவரும் சிறப்பாகவே பந்து வீசினர். குஜராத் அணியில் பவுலிங் செய்த அனைத்து பவுலர்களும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த சீசனில் ரன்களை வாரி வழங்கி வந்த முக்கிய பவுலரான ரிஷத் கான், பவுலிங்கில் பார்மை மீட்டெடுத்து 4 ஓவரில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அற்புதமாக பவுலிங் செய்து 4 ஓவரில் 24 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த தோல்விக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் தொடர்ந்து 7வது இடத்தில் உள்ளது.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.