ஐபிஎல் 2025: முதல் ரவுண்ட் போட்டிகள் நிறைவு! பட்லர் அதிரடி..டெல்லிக்கு எதிராக வெற்றி.. டாப் இடத்துக்கு முன்னேறிய குஜராத்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: முதல் ரவுண்ட் போட்டிகள் நிறைவு! பட்லர் அதிரடி..டெல்லிக்கு எதிராக வெற்றி.. டாப் இடத்துக்கு முன்னேறிய குஜராத்

ஐபிஎல் 2025: முதல் ரவுண்ட் போட்டிகள் நிறைவு! பட்லர் அதிரடி..டெல்லிக்கு எதிராக வெற்றி.. டாப் இடத்துக்கு முன்னேறிய குஜராத்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Apr 19, 2025 08:50 PM IST

10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் தொடரில், 14 லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் விளையாடுகிறது. அதன்படி குஜராத் - டெல்லி போட்டி முடிவுற்ற பிறகு அனைத்து அணிகளும் 7 போட்டிகளில் விளையாடிய நிலையில், முதல் ரவுண்ட் போட்டிகள் நிறைவடைந்துள்ளது. டெல்லியை வீழ்த்திய குஜராத் அணி டாப் இடத்துக்கு முன்னேறியது

முதல் ரவுண்ட் போட்டிகள் நிறைவு! பட்லர் அதிரடி..டெல்லிக்கு எதிராக வெற்றி.. டாப் இடத்துக்கு முன்னேறிய குஜராத்
முதல் ரவுண்ட் போட்டிகள் நிறைவு! பட்லர் அதிரடி..டெல்லிக்கு எதிராக வெற்றி.. டாப் இடத்துக்கு முன்னேறிய குஜராத் (AP)

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 203 ரன்கள் குவித்த நிலையில், இந்த ஸ்கோரை சேஸ் செய்த குஜராத் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குஜராத் சேஸிங்

முன்னதாக, இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 8 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. எந்த பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்காத நிலையில், டெல்லி இவ்வளவு பெரிய ஸ்கோரை குவித்தது.

இதைத்தொடர்ந்து இந்த இலக்கை சேஸ் செய்த குஜராத் டைட்டன்ஸ் 19.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 2024 ரன்கள் எடுத்து, 4 பந்துகள் எஞ்சியிருக்க, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 97, ஷெர்பேன் ருதர்போர்டு 43 ரன்கள் எடுத்தனர். டெல்லி பவுலர்களில் முகேஷ் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

சாய் சுதர்சன் நிதானம்

குஜராத் டைட்டன்ஸ் ஓபனர்களில் கேப்டன் சுப்மன் கில் 7 ரன் எடுத்த நிலையில், ஆட்டத்தின் 1.4 ஓவரில் அவுட்டாகி நடையை கட்டினார். மற்றொரு ஓபனரான சாய் சுதர்சன் தனது வழக்கமான பாணியில் நிதானத்தை கடைப்பிடித்து பேட் செய்தார்.

மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஜோஸ் பட்லர், தொடக்கம் முதல் அதிரடியை வெளிப்படுத்தினார். இதனால் அணியின் ஸ்கோர் உயர தொடங்கின. பவர்ப்ளே முடிவில் குஜராத் டைட்டன்ஸ் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக பேட் செய்து 21 பந்துகளில் 36 ரன்கள் குவித்த சாய் சுதர்சன் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

பட்லர் - ருதர்போர்டு அதிரடி

மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பட்லர் - ருதர்போர்டு ஆகியோர் மாறி மாறி டெல்லி பவுலர்களுக்கு எதிராக தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு பக்கம் ஜோஸ் பட்லர் பவுண்டரிகளாக விரட்ட, ருதர்போர்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

32 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செயதார் பட்லர். ருதர்போர்டும் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 34 பந்துகளில் 43 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தது.

கடைசி வரை களத்தில் இருந்து அதிரடி காட்டிய பட்லர் 54 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். தனது இன்னிங்ஸில் 11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடித்தார்.

முதல் இடத்தில் குஜராத்

டெல்லி பவுலர்களில் அனைவரும் ரன்களை வாரி வழங்கினர். அணியின் ஸ்டிரைக் பவுலரான ஸ்டார்க் 3.2 ஓவரில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஸ்பின்னர் குல்தீப் யாதவ் சிறப்பாக பவுலிங் செய்து 4 ஓவரில் 30 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி தற்போது அனைத்து அணிகளும் 7 போட்டிகள் விளையாடியிருக்கும் நிலையில், முதல் ரவுண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த தருணத்தில் குஜராத் அணி 7 போட்டிகளில் 5 வெற்றி, 2 தோல்வியுடன் முதல் இடத்தில் உள்ளது. முறையே 2 முதல் 9வது இடம் வரை டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் உள்ளன.

கடைசி இடத்தில் இருந்து வரும் சிஎஸ்கே 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்விகளை பெற்றுள்ளது.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.