ஐபிஎல் 2025: ‘மிகவும் மதிக்கும் தோனியிடமிருந்து வந்த வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை’-ஆயுஷ் தந்தை பேட்டி
எம்.எஸ். தோனி அவரைத் தொடர்பு கொண்டு அவரது ஆட்டத்தைப் பாராட்டினார். சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவில், தோனி 'சிறப்பாக செய்தாய், சாம்பியன்' என்று கூறினார்.

ஐபிஎல் 2025: ‘மிகவும் மதிக்கும் தோனியிடமிருந்து வந்த வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை’-சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரேவின் தந்தை யோகேஷ் பேட்டியில் தெரிவித்தார்.
2025 இந்தியன் பிரீமியர் லீக் இளம் வீரர்களுக்கு ஒரு சிறந்த மேடையாக அமைந்துள்ளது. இந்த ஆண்டு, மூன்று பெயர்கள் குறிப்பாக தனித்து நிற்கின்றன - பஞ்சாப் கிங்ஸின் பிரியன்ஷ் ஆர்யா, ராஜஸ்தான் ராயல்ஸின் வைபவ் சூரியவன்ஷி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் 17 வயது திறமையான ஆயுஷ் மாத்ரே. உண்மையில், ஆயுஷ் மாத்ரே சிஎஸ்கே அணியில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படுவதற்கு முன்பே ஊடகங்களில் அங்கீகாரம் பெற்றார். சென்னையின் தேர்வு குழு, செப்பாக்கில் நடைபெற்ற இடைக்கால பயிற்சியின் போது ஆயுஷ் மாத்ரேவை கவனமாக கண்காணித்து வந்தது, அந்த நேரத்தில் ஆயுஷ் மாத்ரே ஒரு வழியில் வரலாறு படைத்தார்.
காயமடைந்த ருதுராஜ் கெய்க்வாட் மாற்றாக சேர்க்கப்பட்டார் சூர்யவன்ஷி. முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக, ஐபிஎல்-இல் விளையாடிய மிக இளம் வீரராக அவர் 32 மற்றும் 30 ரன்கள் எடுத்தார். ஆனால், சிஎஸ்கே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் 48 பந்துகளில் 94 ரன்கள் விளாசி தனது உண்மையான திறனை வெளிப்படுத்தினார். அவரது அற்புதமான ஆட்டத்தில் 5 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கும். சிஎஸ்கே 211 ரன்கள் எடுத்தாலும், ஆர்சிபி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சதத்திலிருந்து 6 ரன்கள் குறைவாக எடுத்தார் ஆயுஷ் மாத்ரே. வைபவ் சூரியவன்ஷியின் சாதனை சதம் அல்லது பிரியன்ஷின் 103 ரன்கள் அல்லது 69 ரன்கள் போல இல்லாவிட்டாலும், அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஆயுஷ் மாத்ரேேவின் தந்தை யோகேஷ் மாத்ரே, தனது மகனை இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகிறார், முன்கூட்டியே கொண்டாட்டம் ஆபத்தானதாக இருக்கலாம் என்று கூறுகிறார்.
ஆயுஷ் மாத்ரே தந்தை கூறியது என்ன?
“ஆயுஷ் மாத்ரே மற்றும் வைபவ் இருவரும் வெவ்வேறு வகையான பேட்ஸ்மேன்கள். யாராவது ஆயுஷ் மாத்ரே வைபவுடன் ஒப்பிட்டால், அதை மனதில் கொள்ளக்கூடாது என்று ஆயுஷ் மாத்ரேவிடம் சொல்லியுள்ளேன். வைபவைப் போல ஆடவோ, அவரைப் போல சதம் அடிக்க முயற்சி செய்யவோ கூடாது என்றும் சொல்லியுள்ளேன். ஆயுஷ் மாத்ரே மிகப்பெரிய விஷயங்களைச் செய்ய முயற்சித்து தன்னைத்தானே அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்,” என்று யோகேஷ் மிட்-டே செய்தியாளரிடம் தெரிவித்தார்.
ஆயுஷ் மாத்ரே மற்றும் எம்.எஸ். தோனி உரையாடல்
சிஎஸ்கே தோற்றாலும், தனது ஆட்டத்திற்குப் பிறகு ஆயுஷ் மாத்ரே மகிழ்ச்சியாக இருந்தார். ஏன்? எம்.எஸ். தோனி அவரைத் தொடர்பு கொண்டு அவரது ஆட்டத்தைப் பாராட்டினார். சிஎஸ்கேவின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட வீடியோவில், தோனி 'சிறப்பாக செய்தாய், சாம்பியன்' என்று கூறினார் என்று ஆயுஷ் மாத்ரே கூறினார், ஆனால் அவரது தந்தை யோகேஷ் வேறு விஷயத்தையும் கூறினார்.
“ஆயுஷ் தனது ஆட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்தார், ஆனால் சிஎஸ்கே ஆர்சிபியை வெல்வதற்கு மிக அருகில் இருந்ததால், ஆட்டத்தை வெல்ல விரும்பினார். ஆனால் ஆட்டத்திற்குப் பிறகு, ஆயுஷ் தோனியுடன் உரையாடி மிகவும் மகிழ்ச்சியடைந்தார்,” என்று யோகேஷ் கூறினார்.
“தோனி அமைதியாக ஆயுஷ், 'நல்லா விளையாடி இருக்க. இனிமேலும் இப்படியே நல்லா விளையாடணும்' என்று கூறினார். சில வார்த்தைகள் மட்டுமே இருந்தாலும், ஆயுஷ் மிகவும் மதிக்கும் தோனியிடமிருந்து வந்த வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை. தோனி அயூஷின் திறனில் நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை அது காட்டுகிறது.” என்றார் யோகேஷ்.

டாபிக்ஸ்