ஐபிஎல் 2025: ஆர்யா, இங்கிலீஸ் அதிரடி.. மும்பையை வீழ்த்தி டாப் இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: ஆர்யா, இங்கிலீஸ் அதிரடி.. மும்பையை வீழ்த்தி டாப் இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்

ஐபிஎல் 2025: ஆர்யா, இங்கிலீஸ் அதிரடி.. மும்பையை வீழ்த்தி டாப் இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated May 26, 2025 11:58 PM IST

மும்பை பவுலர்களுக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் பேட்ஸ்மேன்களான பிரியான்ஷ் ஆர்யா - ஜோஸ் இங்கிலீஸ் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். மும்பையை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் புள்ளிப்பட்டியலில் டாப் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

ஐபிஎல் 2025: ஆர்யா, இங்கிலீஸ் அதிரடி.. மும்பையை வீழ்த்தி டாப் இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப்
ஐபிஎல் 2025: ஆர்யா, இங்கிலீஸ் அதிரடி.. மும்பையை வீழ்த்தி டாப் இடத்துக்கு முன்னேறிய பஞ்சாப் (PTI)

மும்பை இந்தியன்ஸ் அணியும் 13 போட்டிகளில் 17 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் டாப் இடத்தை பிடிக்கும்.

டாப் 2 இடத்தை பிடிக்கும் அணிகள் தான் குவாலிபயர் 1 போட்டியில் விளையாடி நேரடியாக இறுதிப்போட்டி விளையாடும் வாய்பை பெறும். இந்த சீசனில் தங்களது கடைசி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடுகிறது. அத்துடன் ஐபிஎல் 2025 தொடரில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் மோதலாக இந்த போட்டி அமைந்திருந்தது.

இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியில் அஸ்வனி குமார் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் விஜயகுமார் வைஷாக், கெயில் ஜேமிசன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 184 ரன்கள் குவித்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த பஞ்சாப் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பஞ்சாப் சேஸிங்

முன்னதாக, டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து 185 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து 9 பந்துகள் எஞ்சியிருக்க, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னர் 19 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்துக்கு முன்னேறியது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஜோஸ் இங்கிலீஸ் 73, பிரியான்ஷ் ஆர்யா 62 ரன்கள் எடுத்தனர். மும்பை பவுலர்களில் மிட்செல் சாண்ட்னர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா ஒரு விக்கெட் எடுத்தார்.

ஆர்யா - இங்கலீஸ் அதிரடி

டாப் இடத்தை பிடிக்க கட்டாய வெற்றியாக அமைந்த இந்த போட்டியில் பஞ்சாப் ஓபனர் ஆர்யா அதிரடி இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். மற்றொரு ஓபனரான பார்மில் இருந்து வரும் பிரப்சிம்ரன் சிங் 13 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இருப்பினும் ஆர்யா தனது அதிரடியை விடாமல் தொடர்ந்தார். பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் கிங்ஸ் ஒரு விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்து.

இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆர்யா - இங்கிலீஸ் ஜோடி மும்பை பவுலர்களுக்கு எதிராக பவுண்டரி, சிக்ஸர்கள் என தெறிக்கவிடும் இன்னிங்ஸை வெளிப்படுத்தினர்.

முதலில் இங்கிலீஸ் 29 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்ய, பின்னர் ஆர்யாவும் அதே ஓவரில் 27 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்த ஆர்யா 35 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

டாப் இடத்தில் பஞ்சாப்

இவரை தொடர்ந்த வந்த பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தொடக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினார். ஏற்கனவே களத்தில் இருந்த இங்கிலீலும் விடாமல் ரன்வேட்டை நிகழ்த்தினார். 42 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த இங்கலீஸ், சாண்ட்னர் பந்தில் அவுட்டானார்.

இதையடுத்து களத்தில் இருந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். அத்துடன் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்துக்கு முன்னேறியது. ஷ்ரேயாஸ் 16 பந்துகளில் 26 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார்.

மும்பை பவுலர்களில் பும்ரா 4 ஓவரில் 23 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்ததுடன், அதிகபட்சமாக 15 டாட் பந்துகளை வீசியுள்ளார். இந்த தோல்விக்கு பின்னர் மும்பை இந்தியன்ஸ் தொடர்ந்து நான்காவது இடத்தில் நீடிக்கிறது.