ஐபிஎல் 2025: நமன் திர், சூர்யகுமார் யாதவ் அதிரடி.. 2 ஓவரில் மட்டும் 48 ரன்கள்! மும்பை இந்தியன்ஸ் சவால் இலக்கு
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: நமன் திர், சூர்யகுமார் யாதவ் அதிரடி.. 2 ஓவரில் மட்டும் 48 ரன்கள்! மும்பை இந்தியன்ஸ் சவால் இலக்கு

ஐபிஎல் 2025: நமன் திர், சூர்யகுமார் யாதவ் அதிரடி.. 2 ஓவரில் மட்டும் 48 ரன்கள்! மும்பை இந்தியன்ஸ் சவால் இலக்கு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated May 21, 2025 09:40 PM IST

ஆட்டத்தின் 18 ஓவர் வரை டெல்லி கேபிடல்ஸ் அணி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனால் கடைசி இரண்டு ஓவரில் மட்டும் நமன் திர் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் 48 ரன்களை குவித்துள்ளது.

Mumbai Indians' Suryakumar Yadav plays a shot during the Indian Premier League (IPL) Twenty20 cricket match between Mumbai Indians and Delhi Capitals at the Wankhede Stadium in Mumbai on May 21, 2025. (Photo by Punit PARANJPE / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE --
Mumbai Indians' Suryakumar Yadav plays a shot during the Indian Premier League (IPL) Twenty20 cricket match between Mumbai Indians and Delhi Capitals at the Wankhede Stadium in Mumbai on May 21, 2025. (Photo by Punit PARANJPE / AFP) / -- IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE -- (AFP)

இந்த போட்டி தொடங்கும் முன் மும்பை இந்தியன்ஸ் 12 போட்டிகளில் 7 வெற்றி, 5 தோல்வி என 14 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி 12 போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு போட்டி முடிவு இல்லை உள்பட 13 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. டெல்லி கேபிடல்ஸ் அணியும் தனது முந்தைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராக தோல்வியுற்றது. இரு அணிகளும் குஜராத் அணிக்கு எதிராக அடி வாங்கியிருக்கும் நிலையில், இந்த போட்டியில் வென்றால் மட்டுமே ப்ளேஆஃப்பில் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் களமிறங்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிஸ் போஷ்க்கு பதிலாக சாண்டனர் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் நடராஜன், அக்சர் படேலுக்கு பதிலாக மாதவ் திவாரி, துஷ்மந்தா சமீரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அகசர் படேல் காய்ச்சல் காரணமாக இந்த போட்டியில் விளையாடாத நிலையில் டூ பிளெசிஸ் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கேப்டன்சி செய்கிறார்.

டெல்லி கேபிடல்ஸ் பவுலிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் டூ பிளெசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் விக்கெட் இழப்புக்கு ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரயான் ரிக்கெல்டன் 25 ரன்கள் எடுத்தனர். டெல்லி பவுலர்களில் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். துஷ்மந்தா சமீரா, முஸ்துபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

நல்ல தொடக்கம்

மும்பை ஓபனர்களில் ரோஹித் ஷர்மா 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். மற்றொரு ஓபனரான ரிக்கெல்டன் கொஞ்சம் அதிரடி காட்டி பவர்ப்ளே ஓவர்களில் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவருடன் இணைந்து மூன்றாவது பேட்ஸ்மேனாக பேட் செய்த வில் ஜாக்ஸும் அதிரடியாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

பவர்ப்ளே முடிவில் மும்பை இந்தியன்ஸ் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது. 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த வில் ஜாக்ஸ் இரண்டாவது பேட்ஸ்மேனாக அவுட்டானார். இவரை தொடர்ந்து ரிக்கெல்டன் 18 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

சூர்யகுமார் யாதவ் அரைசதம்

மிடில் ஓவர்களில் நிலைத்து பேட் செய்த சூர்யகுமார் யாதவ் விக்கெட் சரிவை தடுத்து அணியின் ரன்ரேட்டை தக்க வைத்தார். தொடக்கத்தில் நிதானமாக பேட் செய்த சூர்யகுமார் யாதவ், பின்னர் கடைசி கட்டத்தில் அதிரடிக்கு மாறினார்.

இவருடன் இணந்து பார்ட்னர்ஷிப் அமைத்த திலக் வர்மா, அதிரடியை வெளிப்படுத்தாமல் நங்கூர இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்தனர்.

திலக் வர்மா 27 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அவ்வப்போது பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்த சூர்யகுமார் யாதவ் தான் எதிர்கொண்ட 36வது பந்தில் அரைசதத்தை எட்டினார்.

நமன் திர் அதிரடி

முதல் 10 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் அடித்தது. கடைசி 10 ஓவரில் 100 ரன்கள் அடித்தது.

குறிப்பாக கடைசி 2 ஓவரில் மட்டும் 48 ரன்களை குவித்தது. இதற்கு முக்கிய காரணமாக நமன் திர் வெளிப்படுத்திய அதிரடி கேமியோ இன்னிங்ஸ் அமைந்தது. ஆட்டத்தின் 20வது ஓவரில் 21 ரன்கள் அடிக்கப்பட்டது. கடைசி கட்டத்தில் பேட் செய்ய வந்த அவர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 8 பந்துகளில் 24 ரன்கள் அடித்தார்.

அதேபோல் சூர்யகுமார் யாதவும் அதரிடி மோடுக்கு மாறி பந்துகளில் ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். தனது இன்னிங்ஸில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் அடித்தார்.

டெல்லி பவுலர்களில் குல்தீப் யாதவ் 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்ததுடன் குறைவான எகானமியுடன் பவுலிங் செய்தார். அதேபோல் விப்ராஜ் நிகமும் விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் 4 ஓவரில் 25 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.

இடதுகை வேகப்பந்து வீச்சாளர் 4 ஓவரில் 30 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்ததுடன் அதிகபட்சமாக 10 டாட் பந்துகளை வீசினார்.