ஐபிஎல் 2025: மாத்ரே, பிரெவீஸ் அதிரடி.. பேட்டிங்கில் தடுமாறிய தோனி.. பினிஷிங்கில் சொதப்பிய சிஎஸ்கே
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: மாத்ரே, பிரெவீஸ் அதிரடி.. பேட்டிங்கில் தடுமாறிய தோனி.. பினிஷிங்கில் சொதப்பிய சிஎஸ்கே

ஐபிஎல் 2025: மாத்ரே, பிரெவீஸ் அதிரடி.. பேட்டிங்கில் தடுமாறிய தோனி.. பினிஷிங்கில் சொதப்பிய சிஎஸ்கே

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 20, 2025 09:24 PM IST

பவர்ப்ளே ஓவரில் ஆயுஷ் மாத்ரே, மிடில் ஓவர்களில் டெவால்ட் பிரெவீஸ் அதிரடிகாட்ட நங்கூர இன்னிங்ஸை வெளிப்படுத்திய ஷிவம் துபே மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் நல்ல பினிஷிங்கை கொடுத்தனர். ராஜஸ்தானுக்கு எதிராக அதிரடியை வெளிப்படுத்திய சிஎஸ்கே அணி

ஐபிஎல் 2025: மாத்ரே, பிரெவீஸ் அதிரடி.. பேட்டிங்கில் தடுமாறிய தோனி.. பினிஷிங்கில் சொதப்பிய சிஎஸ்கே
ஐபிஎல் 2025: மாத்ரே, பிரெவீஸ் அதிரடி.. பேட்டிங்கில் தடுமாறிய தோனி.. பினிஷிங்கில் சொதப்பிய சிஎஸ்கே (PTI)

இந்த போட்டி தொடங்கும் முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) 12 போட்டிகள், 3 வெற்றி, 9 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 13 போட்டிகளில் 3 வெற்றி, 9 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

சிஎஸ்கே தனது முந்தைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. முந்தைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியை தழுவியது. அந்த அணிக்கு இந்த சீசனின் கடைசி போட்டியாக அமைந்துள்ளது. சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயஸ்ஸ் இடையிலான முதல் மோதலில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், அதற்கு சிஎஸ்கே பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்த போட்டியில் களமிறங்கியுள்ளது.

சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஃபருக்கிக்கு பதிலாக யுத்வீர் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங்

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 43, டெவால்ட் பிரெவீஸ் 42, ஷிவம் துபே 39 ரன்கள் எடுத்தனர்

ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களில் யுத்வீர் சிங் 3, ஆகாஷ் மத்வால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். தேஷ்பாண்டே, ஹசரங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

பவர்ப்ளேயில் மிரட்டி ஆயுஷ் மாத்ரே

சிஎஸ்கே அணியில் ஓபனர்களாக டேவான் கான்வே - ஆயுஷ் மாத்ரே ஆகியோர் களமிறங்கினர். கான்வே 10, உர்வில் படேல் 0 என ஒரே ஓவரில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். சர்ப்ரைஸாக பவர்ப்ளே ஓவரில் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்பட்டார்.

முதல் இரண்டு ஓவர் முடிவதற்குள்ளாகவே 2 விக்கெட்டுகளை இழந்தபோதிலும் களத்தில் இருந்த ஆயுஷ் மாத்ரே சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலர்களின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு விரட்டினார். இதனால் அணியின் ஸ்கோர் விர்ரென உயர்ந்தது. அஸ்வினும் தனது பங்களிப்பாக சிக்ஸர், பவுண்டரியை அடித்தார்.

பவர்ப்ளே கடைசி ஓவரில் அதிரடியாக பேட் செய்து வந்த மாத்ரே 20 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்தார். பவர்ப்ளே முடிவில் சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்தது.

துபே - பிரெவீஸ் பார்ட்னர்ஷிப்

அடுத்து பேட் செய்ய வந்த ஜடேஜா 1 ரன்னில் நடையை கட்ட, களத்தில் இருந்த அஸ்வினும் 13 ரன்களில் அவுட்டானார். இதனால் சிஎஸ்கே 78 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அப்போது துபே - பிரெவீஸ் ஜோடி இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் இணைந்து விக்கெட் சரிவை தடுத்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஒரு பக்கம் பிரெவீஸ் பவுண்டரி, சிக்ஸர் என ரன்களை குவிக்க, துபே நங்கூர இன்னிங்ஸை வெளிப்படுத்தினார்.

இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக பேட் செய்து வந்த பிரெவீஸ் 25 பந்துகளில் 42 ரன்கள் அடித்து மட்வால் பந்தில் பெரிய ஷாட் முயற்சியில் அவுட்டானார். தனது இன்னிங்ஸில் 2 பவுண்டர், 3 சிக்ஸர்களை அடித்தார்.

பினிஷிங் சொதப்பல்

முதல் 10 ஓவரில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் குவித்தது. ஆனால் கடைசி 10 ஓவரில் ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக கடைசி 4 ஓவரில் ஷிவம் துபே, எம்எஸ் தோனி ஆகியோர் ஸ்டிரைக்கில் இருந்தபோதிலும் சிஎஸ்கே அணி 27 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆடத்தின் கடைசி ஓவரில் 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்த ஷிவே துபே பவுண்டரி முயற்சியில் அவுட்டானார். ஒரு ராக்கெட் வேக சிக்ஸர் அடித்தபோதிலும் பேட்டிங்கில் தடுமாறிய தோனி 17 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து அதே ஓவரில் அவுட்டானார்.

கடைசி கட்ட ஓவர்களை ராஜஸ்தான் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை நன்கு கட்டுப்படுத்தினர். ராஜஸ்தான் பவுலர்களில் துஷார் தேஷ்பாண்டே, ஹசரங்கா ஆகியோர் அதிகபட்சமாக தலா 10 டாட் பந்துகளை வீசினர்.