ஐபிஎல் 2025: கட்டாய வெற்றி நெருக்கடியில் கொல்கத்தா.. பழிதீர்க்க தயாராக இருக்கும் சிஎஸ்கே! ஜெயிக்கப்போவது யார்?
ப்ளேஆஃப் வாய்ப்பை பெற கட்டாய வெற்றியை பெற்று ஆக வேண்டிய நெருக்கடியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்குகிறது. கொல்கத்தாவுக்கு எதிராக முந்தைய மோதலில் பெற்ற தோல்விக்கு பழிதீர்க்க தயாராக சிஎஸ்கே அணி விளையாட இருக்கிறது.

ஐபிஎல் 2025 தொடரின் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த போட்டி தொடங்கும் முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய 11 போட்டிகளில் 5 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் 11 போட்டிகளில் 2 வெற்றி, 9 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முந்தைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. சிஎஸ்கே அணி முந்தையே போட்டியில் ஆர்சிபிக்கு எதிராக தோல்வியுற்றது. இன்று மோத இருக்கும் கொல்கத்தா - சிஎஸ்கே இடையே இடையே சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து நடைபெற்ற முந்தைய மோதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது. எனவே சிஎஸ்கே அதற்கு பதிலடி தரும் முனைப்பில் களமிறங்கும் என எதிர்பார்க்கலாம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பொறுத்தவரை ப்ளேஆஃப் வாய்ப்பை தக்க வைக்க கட்டாய வெற்றியை பெற வேண்டியாக போட்டியாக சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டம் அமைந்துள்ளது.