ஐபிஎல் 2025: மழையால் தப்பித்த டெல்லி கேபிடல்ஸ்.. நாக் அவுட்டான சன் ரைசர்ஸ்! ப்ளேஆஃப் ரேஸில் இருந்து வெளியேற்றம்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: மழையால் தப்பித்த டெல்லி கேபிடல்ஸ்.. நாக் அவுட்டான சன் ரைசர்ஸ்! ப்ளேஆஃப் ரேஸில் இருந்து வெளியேற்றம்

ஐபிஎல் 2025: மழையால் தப்பித்த டெல்லி கேபிடல்ஸ்.. நாக் அவுட்டான சன் ரைசர்ஸ்! ப்ளேஆஃப் ரேஸில் இருந்து வெளியேற்றம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 06, 2025 12:38 AM IST

டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் முடிந்ததில் இருந்தே சாரல் மழை பெய்ய தொடங்கியது. அவுட் பீல்டிங் மோசமாக இருந்த நிலையில் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மழையால் டெல்லி கேபிடல்ஸ் தப்பித்த நிலையில், சன் ரைசர்ஸ் நாக் அவுட்டாகியுள்ளது.

மழையால் தப்பித்த டெல்லி கேபிடல்ஸ்.. நாக் அவுட்டான சன் ரைசர்ஸ்! ப்ளேஆஃப் ரேஸில் இருந்து வெளியேற்றம்
மழையால் தப்பித்த டெல்லி கேபிடல்ஸ்.. நாக் அவுட்டான சன் ரைசர்ஸ்! ப்ளேஆஃப் ரேஸில் இருந்து வெளியேற்றம் (Surjeet Yadav)

இந்த போட்டியுடன் இனி விளையாட இருக்கும் அனைத்து போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றியை பெற்றால் ப்ளேஆஃப் வாய்ப்பை பெறலாம் என்ற நிலையில் சன் ரைசர்ஸ் அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதிபடுத்தி கொள்ளலாம் என்ற நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் களமிறங்கின.

இரு அணிகளுக்கும் முக்கியத்துவமான போட்டியாக அமைந்த இந்த போட்டியில் சன் ரைடசர்ஸ் முந்தைய போட்டியில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியுது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டிருந்தார்.

மழையால் ரத்து

முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ், சன் ரைசர்ஸ் அணி துல்லிய பவுலிங்கை சமாளிக்க முடியாக தட்டி தடுமாறி 20 ஓவரில் 133 ரன்கள் குவித்தது. முதல் இன்னிங்ஸ் முடிந்ததில் இருந்தே சாரல் மழை பெய்ய தொடங்கிய நிலையில் நீண்ட நேரமாக நீடித்தது. இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது. இதனால் முடிவு ஏதும் இல்லை.

சன் ரைசர்ஸ் நாக் அவுட்

போட்டி ரத்தான நிலையில் சன் ரைசர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டன. இந்த போட்டிக்கு பிறகு புள்ளிப்பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி ஒரு இடம் முன்னேறியுள்ளது. இருப்பினும் மழையால் சன் ரைசர்ஸ் அணியின் ப்ளேஆஃப் வாய்ப்பு பறிபோனது. அத்துடன் தற்போது அந்த அணி ஐபிஎல் 2025 தொடரில் இருந்து நாக் அவுட் செய்யப்பட்டது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமிருக்க இரண்டில் கட்டாயமாக வெற்றி பொற்றால் மட்டுமே ப்ளேஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்கிற நிலைமையில் உள்ளது. தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணி 11 போட்டிகளில் 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு போட்டி முடிவு இல்லை என 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

டெல்லி அணியுடனான ப்ளேஆஃப் ரேஸில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகள் உள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை 12 போட்டிகளில் 3 வெற்றி, 9 தோல்வி, ஒரு போட்டி முடிவு இல்லை என 7 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இனி எஞ்சிய 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் சன் ரைசர்ஸ் அணி 13 புள்ளிகளை தான் பெற முடியும் என்பதால் ப்ளேஆஃப் ரேஸில் இருந்து சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு அடுத்து மூன்றாவது அணியாக வெளியேறியுள்ளது.

இந்த சீசனில் இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஐபிஎல் 2025 சீசனின் 44வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.