ஐபிஎல் 2025: பவுலிங்கில் பும்ரா, போல்ட் தெறி சம்பவம்.. லக்னோவை பழிதீர்த்த மும்பை.. புள்ளிப்பட்டியில் அதிரடி மாற்றம்
துல்லியமான பவுலிங்கால் லக்னோ அணியை கட்டுப்படுத்தி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் பும்ரா, போல்ட் ஆகியோர் தெறி சம்பவம் செய்துள்ளனர். முதல் மோதலில் ஏற்பட்ட தோல்விக்கு மும்பை இந்தியன்ஸ் பழிதீர்த்துள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் 45வது போட்டி மும்பை இந்தியன்ஸ் - லக்னோ ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன்பு மும்பை இந்தியன்ஸ் 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 6வது இடத்திலும் இருந்தது.
இந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையிலான முந்தைய மோதலில் லக்னோ அணி வெற்றி பெற்றது. எனவே அந்த தோல்விக்கு பதிலடி தரும் வகையில் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய வீரர்கள் கார்பின் போஷ், கரன் ஷர்மா ஆகியோரும், லக்னோ அணியில் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 215 ரன்கள் எடுத்த நிலையில், இதை சேஸ் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 161 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தோல்வியை தழுவியது
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சேஸிங்
முன்னதாக, டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 215 எடுத்தது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவரில் 161 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டாகியுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 35, மிட்செல் மார்ஷ் 34, நிக்கோலஸ் பூரான் 27, டேவிட் மில்லர் 24 ரன்கள் எடுத்துள்ளனர். மும்பை இந்தியன்ஸ் பவுலர்களில் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வில் ஜாக்ஸ் 2, போஷ் ஒரு விக்கெட் வீழ்த்தினர். பும்ரா, போல்ட் ஆகியோர் தெற பவுலிங்கில் லக்னோ பேட்டிங் சரிந்தது
அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகள்
மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள் தொடகத்தில் இருந்த நெருக்கடி தர, அதிரடி காட்டினாலும் பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்தாமல் சீரான இடைவெளியில் லக்னோ பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்டானார்கள். பவர்ப்ளே முடிவில் லக்னோ ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது.
ஓபனரான மார்க்ரம் 9 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதன்பின்னர் மார்ஷ் - நிக்கோலஸ் பூரான் அதிரடி காட்டியபோதிலும் நீண்ட நேரத்தில் நீடிக்கவில்லை.
15 பந்துகளில் 27 ரன்கள் அடித்து பூரான், 24 பந்துகளில் 34 ரன்கள் அடித்து மார்ஷ் ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதற்கிடையே கேப்டன் ரிஷப் பந்த் 4 ரன்னில் நடையை கட்டி மற்றொரு ஏமாற்றமான இன்னிங்ஸ் வெளிப்படுத்தினார்.
திருப்பம் தந்த பும்ரா
ஒரு கட்டத்தில் களத்தில் இருந்த ஆயுஷ் பதோனி, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய டேவிட் மில்லர் ஆகியோர் லக்னோ அணியை விக்கெட் சரிவில் இருந்து இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
16 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த மில்லரை தூக்கினார் பும்ரா. அதன் பிறகு அப்துல் சமாத், ஆவேஷ் கான் என அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட் வீழ்த்தி திருப்பம் ஏற்படுத்தினர்.
களத்தில் போராடி வந்த பதோனியும் 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, லக்னோ அணியின் தோல்வி உறுதியானது. கடைசி 4 ஓவர்களில் கைவசம் 2 விக்கெட் மட்டுமே இருக்க 74 ரன்கள் லக்னோ அணிக்கு தேவைப்பட்டது.
டெயில் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை பாதுகாத்து தட்டி தட்டி கொஞ்சம் ரன்களை சேர்த்தனர். ஆனாலும் லக்னோ அணி ஆல் அவுட்டாகியுள்ளது.
துல்லியமாக பவுலிங் செய்து நெருக்கடி தந்த பும்ரா, 4 ஓவரில் 14 டாட் பந்துகளை வீசி 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இவருக்கு அடுத்தபடியாக 4 ஓவரில் 11 டாட் பந்துகள் வீசி வெறும் 11 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்த போல்ட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
மும்பை அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கிய போஷ் 4 ஓவரில் 26 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.
