‘நீக்கப்படவில்லை.. விலகினேன்.. முடிவெடுக்கச் சொன்னார்கள்..’ மனம் திறந்தார் ரோஹித் சர்மா!
ரோஹித் சர்மா தனது ஓய்வு குறித்த ஊகங்களை நிராகரித்து, இந்திய அணியின் கேப்டனாகத் தொடர்வேன் என்று கூறியுள்ளார். சிட்னி டெஸ்டில் அவர் எடுத்த முடிவு பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளார்.

‘நான் ஓய்வு பெறவில்லை; இந்திய அணியின் கேப்டன் பதவியையும் விட்டுக்கொடுக்கவில்லை,’ எ்ன்று தெளிவுபடுத்தியிருக்கிறார் ரோஹித் சர்மா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்டில் விளையாடவில்லை என்ற அவரது முடிவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு நாள் கழித்து, ‘தான் ஓய்வெடுக்கவில்லை அல்லது விலகவில்லை… நிச்சயமாக நீக்கப்படவில்லை,’ என்பதை உறுதிப்படுத்தி இந்த விஷயத்தில் தனது மௌனத்தை உடைத்தார் ரோஹித் சர்மா. தனது சூழ்நிலையை விவரிக்க "விலகினேன்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார் ரோஹித்.
"நான் விலகினேன், நான் சொல்வது இதுதான்," என்று சிட்னி டெஸ்டின் 2வது நாள் மதிய உணவு இடைவேளையின் போது ரோஹித் சமார், ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறினார்.
ஐந்தாவது டெஸ்டில் விளையாடாமல் இருக்க ஏன் முடிவு செய்தார் என்பதையும், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கரிடம் தனது சிந்தனைச் செயல்முறை குறித்து எவ்வாறு தெரிவித்தார் என்பதையும் இந்திய கேப்டன் தெளிவாக விளக்கினார்.