கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கிய இந்தியா..அவன் ஊரிலேயே தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக தரமான சம்பவம்!கையில் டி20 கோப்பை
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஒன்மேன் ஷோ காட்டிய இந்திய வீரர்கள், தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கி தரமான சம்பவம் செய்துள்ளனர். கையில் டி20 கோப்பையுடன் நாடு திரும்புகிறார்கள்.

தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியா அணி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் முடிந்திருக்கும் நிலையில் இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஜோகன்னஸ்பெர்க் வான்டர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் இந்தியா களமிறங்கியது. தொடரில் முன்னிலை பெற்றிருந்தாலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும் கோப்பையை வெல்ல முடியும் என்ற நிலையில் இந்தியாவும், தோல்வியை தவிர்த்து தொடரை சமன் செய்யும் முனைப்பில் தென் ஆப்பரிக்காவும் களமிறங்கின.
இந்தியா வரலாற்று சாதனை
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தனது தேர்வு சரி என்பதை நிருபிக்கும் விதமாக இந்தியா இதுவரை இல்லாத அளவில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் எடுத்து வரலாற்று சாதனை புரிந்தது.