IND vs AFG Innings Break: ஸ்லோவான பிட்ச்சில் சூர்ய குமார், பாண்ட்யா அதிரடி! ஆப்கானிஸ்தானுக்கு சவாலான இலக்கு
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Afg Innings Break: ஸ்லோவான பிட்ச்சில் சூர்ய குமார், பாண்ட்யா அதிரடி! ஆப்கானிஸ்தானுக்கு சவாலான இலக்கு

IND vs AFG Innings Break: ஸ்லோவான பிட்ச்சில் சூர்ய குமார், பாண்ட்யா அதிரடி! ஆப்கானிஸ்தானுக்கு சவாலான இலக்கு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 20, 2024 09:55 PM IST

கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் நல்ல தொடக்கத்தை தர, சூர்ய குமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா அதிரடியால் ஸ்லோவான பிட்ச்சில் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்துள்ளது.

சூர்ய குமார், பாண்ட்யா அதிரடி, ஆப்கானிஸ்தானுக்கு சவாலான இலக்கு
சூர்ய குமார், பாண்ட்யா அதிரடி, ஆப்கானிஸ்தானுக்கு சவாலான இலக்கு (AP)

இந்த போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்க்கு பதிலாக ஸ்பின்னர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியிலும் ஸ்பின் ஆல்ரவுண்டர் கரீம் ஜனத்துக்கு பதிலாக தொடக்க பேட்டரும், இடது கை ஸ்பின் பவுலருமான ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53, ஹர்திக் பாண்ட்யா 32, விராட் கோலி 24 ரன்கள் அடித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் பவுலர்களில் கேப்டன் ரஷித் கான், ஃபசல் ஃபரூக்கி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நவீன்-உல்-ஹக் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

சூர்ய்குமார் யாதவ் அபாரம்

பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கும் விதமாக ஸ்லோவாக செயல்பட்டாலும், அதை பற்றி கவலைப்படாமல் பேட்டிங் செய்ய களமிறங்கியது முதல் விரைவாக ரன்குவிப்பில் ஈடுபட்டார். அவ்வப்போது தனது ஐகானிக் ஸ்வீப், கவர் திசையில் ஸ்லாக் ஷாட்கள் மூலம் பவுண்டரி, சிக்ஸர்களை அடித்தார்.

ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் நிலைத்து நின்ற பேட் செய்த சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

இதன் பின்னர் அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டானார். 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த சூர்யகுமார் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்தார்.

பாண்ட்யா பினிஷ்

லீக் போட்டிகளில் கடைசி கடைசி 5 ஓவர்களில் பேட்டிங் வாய்ப்பை பெற்று பேட்டிங்கில் ஜொலிக்க முடியாமல் தவித்து வந்த பாண்ட்யா, இந்த போட்டியில் 10.5 ஓவரிலேயே களமிறங்கினார்.

இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொண்ட பாண்ட்யா முதலில் நிதானமும், பின்னர் அதிரடியும் காட்டினார். 24 பந்துகளில் 32 ரன்கள் அடித்து சிக்ஸர் முயற்சியில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அடித்தார்.

ரஷித் கான், ஃபரூக்கி கலக்கல்

ஸ்பின்னர் ரிஷித் கான், இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஃபசல் ஃபரூக்கி சிறப்பாக பவுலிங் செய்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கொஞ்சம் தலைவலி கொடுத்தனர்.

நன்றாக பேட் செய்து வந்த ரிஷப் பண்ட், கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து தூக்கினார். பின்னர் ஷிவம் துபே விக்கெட்டையும் எடுத்தார்.

அதேபோல் ஃபசல் ஃபரூக்கி முதலில் ரோகித் ஷர்மா, பின்னர் கடைசி கட்டத்தில் சிறப்பாக பேட் செய்த சூர்ய குமார் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.