ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: கிங் இஸ் பேக்..சதத்துடன் பினிஷ் செய்த கோலி.. நாக்அவுட் ஆகிய பாகிஸ்தான்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: கிங் இஸ் பேக்..சதத்துடன் பினிஷ் செய்த கோலி.. நாக்அவுட் ஆகிய பாகிஸ்தான்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: கிங் இஸ் பேக்..சதத்துடன் பினிஷ் செய்த கோலி.. நாக்அவுட் ஆகிய பாகிஸ்தான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Feb 23, 2025 10:08 PM IST

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: ஒரு நாள் போட்டிகளில் 51வது சதத்தை அடித்திருக்கும் விராட் கோலி, அதிக சதமடித்த வீரர்களின் சச்சின் டென்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். சேஸிங்கில் கோலி அடித்திருக்கும் 28வது சதமாகவும் இது அமைந்துள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: கிங் இஸ் பேக்..சதத்துடன் பினிஷ் செய்த கோலி.. நாக்அவுட் ஆகிய பாகிஸ்தான்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: கிங் இஸ் பேக்..சதத்துடன் பினிஷ் செய்த கோலி.. நாக்அவுட் ஆகிய பாகிஸ்தான்

இந்தியா சேஸிங்

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான், இந்தியா பவுலர்களின் பந்துவீச்சுக்கு எதிராக அதிரடியாக ரன் குவிக்க முடியாமல் திணறிய நிலையில் 49.4 ஓவரில் 241 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதைத்தொடர்ந்து சேஸிங்கில் களமிறங்கிய இந்தியா தொடக்கம் முதலே பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி நிலையில் 42.3 ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் 45 பந்துகள் மீதமிருக்க வெற்றியை பதிவு செய்ததது. அதிகபட்சமாக விராட் கோலி 100, ஷ்ரேயாஸ் ஐயர் 56, சுப்மன் கில் 46 ரன்கள் எடுத்தனர்.

பாகிஸ்தான் பவுலர்களில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ரோஹித் அதிரடி தொடக்கம்

இந்திய அணிக்கு வழக்கம் போல் அதிரடியான தொடக்கத்தை ரோஹித் ஷர்மா கொடுத்தார். அடுத்தடுத்து மூன்று பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்த 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்துவிட்டு அப்ரிடி பந்தில் கிளீன் போல்டு ஆகி வெளியேறினார். ரோஹித் ஷர்மா அவுட்டாகும்போது அணியின் ஸ்கோர் 4.6 ஓவரில் 31 ரன்கள் என்று இருந்தது.

கோலி சதம்

இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து நிதானத்தை கடைப்பிடித்து விளையாடி வந்தார் கோலி. ரோஹித் அவுட்டான பிறகு அணியின் மற்றொரு ஓபனர் கில்லுடன் இணைந்த விராட் கோலி பொறுமையாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். இருவரும் சேர்ந்து அவ்வப்போது பவுண்டரிகளை விளாசவும் தவறவில்லை. இந்த கூட்டணி 69 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சிறப்பாக பேட் செய்த கில் 46 ரன்கள் அடித்துவிட்டு அப்ரார் அகமது பந்தில் போல்டாகி வெளியேறினார்.

இதன் பிறகு பேட் செய்ய வந்த ஷ்ரேயாஸ் ஐயர் நல்ல பார்மில் இருந்து வரும் நிலையில், தனது பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்தி விரைவாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். அத்துடன் தனது 21வது அரைசதத்தை பூர்த்தி செய்த ஷ்ரேயாஸ் ஐயர், 56 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதற்கிடையே விராட் கோலி அரைசதத்தை கடந்து மெல்ல மெல்ல ரன்களை சேர்த்தார். இறுதியில் பவுண்டரியுடன் சதமடித்த கோலி, ஆட்டத்தையும் பினிஷ் செய்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் கோலி அடித்திருக்கும் இந்த சதம் ஸ்பெஷலாக அமைந்துள்ளது. சதமடித்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. கோலி தனது இன்னிங்ஸில் 111 பந்துகளில் 100 ரன்கள் அடித்ததோடு, 7 பவுண்டரிகளை விளாசினார்.

சச்சின் சாதனை சமன்

இந்த போட்டியில் கோலி அடித்திருக்கும் சதம், ஒரு நாள் போட்டிகளில் அவர் அடித்திருக்கும் 51வது சதமாகும். இதன் மூலம் அதிக சதம் அடித்த வீரர்களில் ஜாம்பவான் வீரர் சச்சின் டென்டுல்கர் சாதனையை சமன் செய்துள்ளார். அத்துடன் இந்த போட்டியில் 14 ஆயிரம் ரன்களை கடந்த கோலி, ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை அடித்திருக்கும் மூன்றாவது வீரர் என்ற இடத்துக்கு முன்னேறினார்.