ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: நியூசிலாந்துக்கு அரையிறுதிக்கான நுழைவாயில்.. வங்கதேசத்துக்கு தப்பிபப்தற்கான ஒரே வழி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: நியூசிலாந்துக்கு அரையிறுதிக்கான நுழைவாயில்.. வங்கதேசத்துக்கு தப்பிபப்தற்கான ஒரே வழி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: நியூசிலாந்துக்கு அரையிறுதிக்கான நுழைவாயில்.. வங்கதேசத்துக்கு தப்பிபப்தற்கான ஒரே வழி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Feb 24, 2025 05:30 AM IST

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025: இன்று நடைபெற இருக்கும் போட்டி நியூசிலாந்து அணி அரையிறுதியில் நுழைவதற்கான நுழைவு வாயிலாக இருக்கின்றன. அதே சமயம் வங்கதேச அணி தொடரில் இருந்து வெளியேறாமல் தப்பிப்பதற்கான போட்டியாக உள்ளது.

நியூசிலாந்துக்கு அரையிறுதிக்கான நுழைவாயில்.. வங்கதேசத்துக்கு தப்பிபப்தற்கான ஒரே வழி
நியூசிலாந்துக்கு அரையிறுதிக்கான நுழைவாயில்.. வங்கதேசத்துக்கு தப்பிபப்தற்கான ஒரே வழி

நியூசிலாந்து தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. வங்கதேசம் அணி தனது முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை தழுவியது. இருப்பினும் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

நல்ல பார்ம்

நியூசிலாந்து அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் நல்ல பார்மில் உள்ளது. முதல் போட்டியில் வில் யங், டாம் லாதம் ஆகியோர் சதமடித்தனர். பவுலிங்கில் மேட் ஹென்றி, வில் ஓ'ரூர்க் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர். அத்துடன் சரியான காம்பினேஷன் கொண்ட அணியாக வலம் வருகிறது.

இன்று நடைபெறும் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தினால் தொடரில் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்து விடலாம் என்கிற ரீதியில் போட்டியில் களமிறங்குகிறது.

பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை

வங்கதேசம் அணியை பொறுத்தவரை சமீப காலமாக ஒரு நாள் போட்டியில் பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தும் விதமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் ஜாக்கர் அலி 68, டவுஹித் ஹிரிதோய் சதத்தால் அணி சரிவில் இருந்து மீண்டது. எனவே தரமான பவுலிங்கை கொண்டிருக்கும் நியூசிலாந்துக்கு எதிராக வங்கதேசம் பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டால் மட்டுமே இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டியாக நிலவும்.

அதேபோல் வங்கதேச அணியின் மற்றொரு பலமாக அணியின் ஸ்பின்னர்கள் உள்ளார்கள். நியூசிலாந்து அணியிலும் மூன்று ஸ்பின்னர்கள் இருந்தாலும், முதல் போட்டியில் கேப்டன் சாண்ட்னர் மட்டுமே விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் அதிக ரன்களையும் வாரி வழங்கினார்.

பிட்ச் நிலவரம்

ராவல்பிண்டி மைதானம் பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாகவே இருந்துள்ளது. இருப்பினும் ஸ்பின்னர்களை காட்டிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் சாதித்துள்ளார்கள். அந்த வகையில் புதிய பந்து பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்ககூடியதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இரவுக்கு பின்னர் வெப்பநிலை வெகுவாக குறையும் என கூறப்பட்டிருக்கும் பனிப்பொலிவுக்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என தெரிகிறது.

வங்கதேசம் - நியூசிலாந்து இதுவரை

இந்த இரு அணிகளும் 45 முறை இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 33, வங்கதேசம் 11 முறை வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லை. கடைசியாக இந்த இரு அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டியில் துபாயில் விளையாடிய வங்கதேசம், தற்போது இரண்டாவது போட்டியை பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் விளையாட இருக்கிறது.