ஐபிஎல் 2025: இந்திய கிரிக்கெட் எதிர்காலமாக வைபவ் சூர்யவன்ஷி இருப்பார் என நம்புகிறேன்! அபிநவ் முகுந்த்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: இந்திய கிரிக்கெட் எதிர்காலமாக வைபவ் சூர்யவன்ஷி இருப்பார் என நம்புகிறேன்! அபிநவ் முகுந்த்

ஐபிஎல் 2025: இந்திய கிரிக்கெட் எதிர்காலமாக வைபவ் சூர்யவன்ஷி இருப்பார் என நம்புகிறேன்! அபிநவ் முகுந்த்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 21, 2025 01:59 PM IST

அதிரடியாக பேட் செய்யும் சூர்யவன்ஷி, பக்குவமான இன்னிங்ஸ் அருமையாக இருந்தது.14 வயதிலேயே இவர் 80 முதல் 90 மீட்டர் சிக்ஸர்கள் அடிக்கிறார். இந்திய கிரிக்கெட் எதிர்காலத்தின் அறிகுறியாக திகழ்கிறார் என்று அபிநவ் முகுந்த் பாராட்டியுள்ளார்

ஐபிஎல் 2025: இந்திய கிரிக்கெட் எதிர்காலமாக வைபவ் சூர்யவன்ஷி இருப்பார் என நம்புகிறேன்! அபிநவ் முகுந்த்
ஐபிஎல் 2025: இந்திய கிரிக்கெட் எதிர்காலமாக வைபவ் சூர்யவன்ஷி இருப்பார் என நம்புகிறேன்! அபிநவ் முகுந்த் (AP)

ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 போட்டிகளில் 4 வெற்றி, 10 தோல்விகளை பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியை தொடர்ந்து நடந்த ஜியோ ஹாட்ஸ்டாரின் Match Centre Live நிகழ்ச்சியில் ஜியோஸ்டார் நிபுணர்களான வருண் ஆரோன், அபிநவ் முகுந்த் ஆகியோர் பேசினர்.

வருண் ஆரோன் பேசும்போது சென்னை சூப்பர் கிங்ஸைக் கொஞ்சம் தடுமாற வைத்தாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் நிதானமாக போட்டியை முடித்ததற்காக பாராட்டினார்

இந்திய அணியின் எதிர்காலம்

ஜியோஸ்டார் நிபுணர் அபிநவ் முகுந்த், அழுத்தத்தில் சிறப்பாக ஆடிய இளைய வீரர் வைபவ் சூர்யவன்ஷியை புகழ்ந்தார். "அதிரடியாக பேட் செய்யும் சூர்யவன்ஷி, பக்குவமான இன்னிங்ஸ் அருமையாக இருந்தது. பவர் பிளேவில் மூன்று அல்லது நான்கு பந்துகள்தான் அவர் சந்தித்தார். ஸ்பின்னுக்கு எதிராக அவரது ஆட்டத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. ஆனால் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஸ்பின் பந்துவீச்சில் நன்கு விளையாடினார். நூர் முகமது மற்றும் ஜடேஜாவை சிறப்பாக எதிர்கொண்டார்.

சூர்யவன்ஷியின் ஸ்ட்ரைக் ரேட், ஆட்டத்தை மையப்படுத்திய விதம், எல்லாம் சிறப்பு. அவர் அடிக்கும் பந்துகள் எல்லாம் பவர் ஹிட்டாகவே இருக்கின்றன. அவர் அடித்தது எல்லாம் சாதாரண சிக்ஸர்கள் அல்ல. 14 வயதிலேயே இவர் 80 முதல் 90 மீட்டர் சிக்ஸர்கள் அடிக்கிறார். இந்திய கிரிக்கெட் எதிர்காலத்தின் அறிகுறியாக திகழ்கிறார்" என்றார்.

கேஎல் ராகுல் இடையூறாக இருப்பார்

வருண் ஆரோன், மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் போட்டி பற்றியும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேஆஃப் வாய்ப்புகள் பற்றியும் கூறினார், "மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் முக்கியமானதாக இருக்கும். மழை பெய்யாமல் இருக்கணும் என நம்புகிறேன். ஏனெனில் இது ஒரு பெரிய போட்டியாக இருக்கப்போகிறது.

கேஎல் ராகுல் வான்கடேவில் விளையாடும்போது மிக அருமையாக ஆடுவார். அவர் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடையூறாக இருக்கக்கூடும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

போட்டியை முடித்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்

“ராஜஸ்தான் ராயல்ஸ் மிகவும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அஸ்வின் இரட்டை விக்கெட்டை எடுத்த ஓவரில் கொஞ்சம் ஆட்டத்தின் போக்கு மாறியது. ஏனெனில் இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் மிடில் ஆர்டர் பலமுறை தோல்வியடைந்தது. ஆனால் இந்த முறை அது தோல்வியடையவில்லை.

ரியான் பராக் ரன்கள் அடிப்பார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் அவுட்டானார். ஹெட்மேயர் மற்றும் ஜுரேல் சீராக போட்டியை முடித்தார்கள். அவர்கள் நிச்சயமாக இப்போது ஆறுதல் பெற்று இருப்பார்கள்" என்று கூறினார்.

மட்வால் சரியான திட்டத்துடன் செயல்பட்டார்

தொடர்ந்து, "பவுலர்களில் ஆகாஷ் மட்வால் சூழ்நிலைகளை நன்கு பயன்படுத்தினார். ரவுண்ட்-ஆர்ம் ஆக்‌ஷனில் சில நல்ல யார்க்கர்களை எறிந்தார். பிரெவீஸ் அவரது யார்க்கரை தவறவிட்டார். சரியான திட்டத்துடன் செயல்பட்டார். அவரை ஏன் ஏழாவது அல்லது எட்டாவது போட்டிக்குப்பிறகுதான் பயன்படுத்தினார்கள் என்பது ஆச்சரியமாகவே உள்ளது. நன்கு டெத் பவுலிங் ஸ்கில் இருக்கின்றன. சந்தீப் ஷர்மாவுடன் அவர் ஜோடியாக பவுலிங் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.” என்றார்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மோதும் முக்கியமான போட்டியை இன்று இரவு 7:30 மணிக்கு ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையில் காண்க