HT Cricket SPL: புகழ்பெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் அதிக முறை அணியை வழிநடத்திய கேப்டன்கள்
இந்த ஆண்டு கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் ஆஸி.,யும் ஜெயித்துள்ளன. இன்னும் 3 டெஸ்ட் ஆட்டங்கள் உள்ளன. முதல் டெஸ்டில் ஸ்டேன்ட்- இன் கேப்டனாக பும்ரா அணியை வழிநடத்தி வெற்றியைத் தேடித் தந்தார்.

பார்டர்-கவாஸ்கர் டிராபி என்பது இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும், இது இரண்டு புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களின் பெயரை சேர்த்து உருவாக்கப்பட்ட தொடர் ஆகும். ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் மற்றும் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் ஆகியோரின் பெயர்களை சேர்த்து இந்தத் தொடருக்கு பார்டர்-கவாஸ்கர் என சூட்டப்பட்டுள்ளது. இத்தொடர் 1996 இல் தொடங்கப்பட்டது மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் மதிப்புமிக்க போட்டிகளில் ஒன்றாகும், இது பெரும்பாலும் அதன் தீவிரமான மற்றும் போட்டித் தன்மைக்கு பெயர் பெற்றது. கிரிக்கெட் ரசிகர்களும் இப்போட்டியை உன்னிப்பாக கவனிப்பார்கள்.
இந்த ஆண்டு கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்டில் ஆஸி.,யும் ஜெயித்துள்ளன. இன்னும் 3 டெஸ்ட் ஆட்டங்கள் உள்ளன. முதல் டெஸ்டில் ஸ்டேன்ட்- இன் கேப்டனாக பும்ரா அணியை வழிநடத்தி வெற்றியைத் தேடித் தந்தார். தனிப்பட்ட காரணங்களால் முதல் டெஸ்டில் விளையாட முடியாமல் போன கேப்டன் ரோஹித் சர்மா, 2வது டெஸ்டில் அணியை வழிநடத்தினார். இருப்பினும், துரதிருஷ்டவசமாக 3வது நாளிலேயே மேட்ச் முடிவுக்கு வந்தது. இந்தத் தருணத்தில் இத்தொடரில் இரு அணிகளிலும் அதிக முறை கேப்டன்சி பணியை வகித்து அணியை வழிநடத்தியது யார் யார் என பார்ப்போம்.
சமீபத்திய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கேப்டனாக அதிக போட்டிகள் ஆடியவர் என்ற சாதனை முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் வசம் உள்ளது. 2004 முதல் 2010 வரை 11 பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடர்களுக்கு பாண்டிங் கேப்டனாக இருந்தார்.
