நட்பு, காதல், துரோகம்.. முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  நட்பு, காதல், துரோகம்.. முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது

நட்பு, காதல், துரோகம்.. முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published May 06, 2025 04:55 PM IST

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரின் குடி பகட்சுனி வீட்டுவசதி வாரிய பகுதியின் போலீசார், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஷிவாலிக் சர்மாவை கைது செய்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியில் விளையாடிய இந்த வீரர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

நட்பு, காதல், துரோகம்.. முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது
நட்பு, காதல், துரோகம்.. முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது

பாலியல் வழக்கில் கைது

இதையடுத்து ஷிவாலிக் சர்மாவை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்துள்ள போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். தன்னை பாலியல் வன்கொடுமை செய்தததாக ஷிவாலிக் சர்மாவின் தோழி புகார் அளித்துள்லார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில், நிச்சயதார்த்தமும் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதன் பிறகு ஷிவாலிக் சர்மா மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியினரால் ஏலம் எடுக்கப்பட்டிருந்த அவர், பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது அவர் எந்த ஐபிஎல் அணியிலும் இடம்பெறவில்லை. பரோடா அணியில் ஹார்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியாவுடன் விளையாடியுள்ளார் ஷிவாலிக் சர்மா. இதுவரை பரோடாவுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் 50க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியிள்ள இவர் இடது கை பேட்ஸமேன், லெக் பிரேக் பவுலர் என ஆல்ரவுண்டராக ஜொலித்துள்ளார்.

நீதிமன்ற காவல்

பெண் அளித்த புகாரின் பேரில், குஜராத்தின் வதோதராவின் அடாலதாரா காவல் நிலைய பகுதியைச் சேர்ந்த ஷிவாலிக் சர்மாவை போலீசார் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் ஜோத்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக காவல் அதிகாரி ஹமீர் சிங் பாட்டி தெரிவித்துள்ளார். தற்போது நீதிமன்ற உத்தரவின்பேரில் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் வதோத்ராவில் வசித்து வரும் ஷிவாலிக் சர்மா ஐபிஎல் 2024 தொடரிலும் அணியில் இடம்பிடித்திருந்தார். ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின்போது அவர் விடுவிக்கப்பட்டார். ஐபிஎல் 2025 ஏலத்தின்போது அவரை எந்த அணியும் எடுக்கவில்லை.

சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட பழக்கம்

ஷிவாலிக் சர்மா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக போலீசார் தரப்பில், "பாதிக்கப்பட்ட பெண், சமூக ஊடகங்கள் மூலம் ஷிவாலிக்குடன் நட்பு கொண்டுள்ளார். பின்னர் இருவரும் நெருக்கமாகியுள்ளனர்.

ஷிவாலிக் பல முறை ஜோத்பூருக்கு வந்து பாதிக்கப்பட்ட பெண் சந்தித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். ஷிவாலிக்கும் அந்தப் பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். ஆனால் ஷிவாலிக்கின் குடும்பத்தினர் அவருக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த பெண், ஷிவாலிக் சர்மா மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். இதன் பேரில் அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 முதல் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார் ஷிவாலிக் சர்மா. இதுவரை 18 முதல்தர கிரிக்கெட், 13 லிஸ்ட் ஏ போட்டிகள், 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.