நட்பு, காதல், துரோகம்.. முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரின் குடி பகட்சுனி வீட்டுவசதி வாரிய பகுதியின் போலீசார், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஷிவாலிக் சர்மாவை கைது செய்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியில் விளையாடிய இந்த வீரர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

நட்பு, காதல், துரோகம்.. முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது
இந்திய உள்ளூர் கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக விளையாடி வந்தவர் ஷிவாலிக் சர்மா. கடந்த 2023 ஐபிஎல் சீசனுக்காக நடைபெற்ற ஏலத்தில் அடிப்படை விலையான ரூ. 20 லட்சத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியினரால் ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இவர் ஒரு போட்டியிலும் களமிறங்கவில்லை.
பாலியல் வழக்கில் கைது
இதையடுத்து ஷிவாலிக் சர்மாவை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்துள்ள போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். தன்னை பாலியல் வன்கொடுமை செய்தததாக ஷிவாலிக் சர்மாவின் தோழி புகார் அளித்துள்லார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில், நிச்சயதார்த்தமும் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதன் பிறகு ஷிவாலிக் சர்மா மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.