ஐபிஎல் 2025: கோடிகள் புரளும் ஐபிஎல்.. போட்டிகளில் முடிவை மாற்றக்கூடிய அம்பயர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: கோடிகள் புரளும் ஐபிஎல்.. போட்டிகளில் முடிவை மாற்றக்கூடிய அம்பயர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல் 2025: கோடிகள் புரளும் ஐபிஎல்.. போட்டிகளில் முடிவை மாற்றக்கூடிய அம்பயர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 26, 2025 02:25 PM IST

ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் அம்பயர்கள் நடுவர்கள் எவ்வளவு பெறுகிறார்கள் தெரியுமா? உள்நாட்டு கிரிக்கெட்டில் வழக்கமாக சம்பாதிப்பதை விட பலமடங்கு அதிகமாக சம்பளம் பெறுகிறார்கள்

கோடிகள் புரளும் ஐபிஎல்.. போட்டிகளில் முடிவை மாற்றக்கூடிய அம்பயர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
கோடிகள் புரளும் ஐபிஎல்.. போட்டிகளில் முடிவை மாற்றக்கூடிய அம்பயர்கள் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த மெகா கிரிக்கெட் லீக்கை மைதானத்தில் வெற்றிகரமாக நிர்வகிக்கும் நடுவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது பலருக்கும் எழும் பொதுவான கேள்விகளில் ஒன்றாகவே உள்ளது. அம்பயர்களின் முடிவுகள் போட்டியின் முடிவுகளை மாற்றுகின்றன. அந்த அளவில் முக்கியமானவர்களாக இருந்து வரும் அம்பயர்களின் சம்பளம் மற்றும் அல்வென்ஸ்கள் எவ்வளவு என்பதை பார்க்கலாம்

ஐபிஎல் போட்டிகளில் அம்பயர்கள் பெறும் சம்பளம் விவரம்

ஐபிஎல் போட்டிகளில் அம்பயர்களுக்கு அதிக சம்பளம் உண்டு. இந்த மெகா லீக்கில் கள அம்பயர்களுக்கு ஒரு போட்டிக்கு ரூ. 3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. நான்காவது அம்பயராக இருப்பவருக்கு ஒரு போட்டிக்கு ரூ. 2 லட்சம் வரை சம்பளம் தரப்படுகிறது. இது வழக்கமான உள்ளூர் போட்டிகளை விட மிக அதிகம்.

அம்பயர் பெறும் அதிக அளவு சம்பளத்துக்கு ஏற்ப அவர்கள் மீதான அழுத்தமும் அதிகமாகவே உள்ளது. ஐபிஎல் போன்ற மெகா லீக்கில், ஒவ்வொரு போட்டியும் உற்சாகம் மிக்கதாக இருப்பதோடு, போட்டியின் ஒவ்வொரு பந்துகளும் அது சார்ந்த முடிவுகளும் மிகவும் முக்கியமானது. இதுபோன்ற போட்டிகளில், அம்பயரின் முடிவுகள் போட்டியின் முடிவுகளையே மாறக்கூடியதாக இருக்கும். எனவே ஒவ்வொரு போட்டியிலும் அம்பயர்கள் தங்களது செயல்பாட்டில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் போட்டி நடக்கும் மூன்று மணி நேரம் மட்டுமே மைதானத்தில் இருந்தாலும், அந்த குறுகிய நேரத்தில் அதிக அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் அம்பயர்களின் சம்பளம்

ஐபிஎல்லுடன் ஒப்பிடும்போது, ​​உள்ளூர் கிரிக்கெட்டில் நடுவர்களின் சம்பளம் மிகக் குறைவு. உண்மையில், உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து பிசிசிஐ பெறும் வருமானமும் குறைவு. எனவே அது நடுவர்களின் சம்பளம் மற்றும் அல்வென்ஸ்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஐபிஎல்லில் ஒரு போட்டிக்கு ரூ. 3 லட்சம் சம்பாதிக்கும் அம்பயர்கள், உள்நாட்டு கிரிக்கெட்டில் அதில் பத்தில் ஒரு பங்கை மட்டுமே பெறுகிறார்கள்.

கிரேடு பி அம்பயர் ஒரு நாளைக்கு ரூ. 30 ஆயிரம் சம்பாதிக்கிறார். கிரேடு ஏ நடுவர் நாளை் ஒன்றுக்கு ரூ. 40 ஆயிரம் சம்பாதிக்கிறார். நான்கு நாள் போட்டிக்கு, அவர்களுக்கு ரூ. 1.2 லட்சம் முதல் ரூ. 1.6 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அந்தக் கணக்கீட்டைப் பார்த்தால், ஐபிஎல்லின் ஒன்றரை மாதத்தில் நடுவர்கள் சம்பாதிக்கும் தொகை, ஒரு வருடம் முழுவதும் உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர்கள் சம்பாதிக்கும் தொகையை காட்டிலும் அதிகமாவே இருக்கும்.

ஆனால் சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை, ஐபிஎல் அம்பயர்களின் சம்பளம் மிக குறைவாகவே உள்ளது. ஐசிசி எலைட் பேனல் அம்பயர்களாக இருந்தாலும், அவர்கள் கொஞ்சம் அதிகமாகவே சம்பாதிக்கிறார்கள். இந்தக் குழுவில் உள்ளவர்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ. 65 லட்சம் முதல் ரூ. 1.7 கோடி வரை பெறுகிறார்கள். போட்டிகளைப் பொறுத்தவரை, அவர்கள் ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை பெறுகிறார்கள்.

ஒருநாள் போட்டியாக இருந்தால், அது சுமார் ரூ. 2 லட்சம், டி20 போட்டியாக இருந்தால், அது சுமார் ரூ. 1.2 லட்சம். எந்தக் கணக்கீட்டின்படியும், ஐபிஎல்லில் போட்டிக்கு அவர்கள் பெறும் தொகையை விட இவர்கள் பெறும் தொகை மிகக் குறைவு. இதிலிருந்து, ஐபிஎல் போட்டிகளின் வரம்பு என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.