இப்போ என்ன செய்வீங்க.. திருந்தாத திக்வேஷ் ரதி! புல்தரையில் எழுதி கொண்டாட்டம்.. பிசிசிஐ தடையில் இருந்து எஸ்கேப்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  இப்போ என்ன செய்வீங்க.. திருந்தாத திக்வேஷ் ரதி! புல்தரையில் எழுதி கொண்டாட்டம்.. பிசிசிஐ தடையில் இருந்து எஸ்கேப்

இப்போ என்ன செய்வீங்க.. திருந்தாத திக்வேஷ் ரதி! புல்தரையில் எழுதி கொண்டாட்டம்.. பிசிசிஐ தடையில் இருந்து எஸ்கேப்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 09, 2025 08:08 PM IST

Digvesh Rathi: இரண்டு தகுதி இழப்பு புள்ளிகள், இரண்டு முறை அபராதம், பிசிசிஐ எச்சரித்த நிலையிலும் விக்கெட் வீழ்த்திய பிறகு தனது நோட் புக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் லக்னோ வீரர் திக்வேஷ் ரதி. இந்த முறை வழக்கமான கொண்டாட்டத்தை சற்று வித்தியாசமாக வெளிப்படுத்தி தடையில் இருந்து தப்பித்துள்ளார்.

இப்போ என்ன செய்வீங்க.. திருந்தாத திக்வேஷ் ரதி! புல்தரையில் எழுதி கொண்டாட்டம்.. பிசிசிஐ தடையில் இருந்து எஸ்கேப்
இப்போ என்ன செய்வீங்க.. திருந்தாத திக்வேஷ் ரதி! புல்தரையில் எழுதி கொண்டாட்டம்.. பிசிசிஐ தடையில் இருந்து எஸ்கேப் (REUTERS)

லக்னோ அணியின் ஸ்டிரைக் பவுலர்

டெல்லி பிரீமியர் லீக்கின் (DPL) தொடக்கப் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தால் கவனம் ஈர்த்த திக்வேஷ் ரதி, கடந்த டிசம்பரில் நடந்த ஏலத்தில் அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்துக்கு லக்னோ அணியினரால் வாங்கப்பட்டார். இதையடுத்து இந்த சீசனில் லக்னோ அணியின் சிறந்த பந்து வீச்சாளராக உருவெடுத்திருக்கும் திக்வேஷ் ரதி, இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 7.75 என்ற எகானமியுடன், 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அந்த வகையில் லக்னோ அணியின் ஸ்டிரைக் பவுலர்களில் ஒருவராக திகழ்கிறார்.

புல்தரையில் எழுதி நோட்புக் கொண்டாட்டம்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது, ஸ்டால் ஆல்ரவுண்டரும், தனது மனசீக குருவாக இருந்து வரும் சுனில் நரைன் விக்கெட்டை பவர்பிளேவுக்கு பின் முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் திக்வேஷ் ரதி. அதிரடியாக பேட் செய்து வந்த சுனில் நரைன் விக்கெட்டை தான் வீசிய இரண்டாவது பந்திலேயே அவுட்டாக்கினார்.

திக்வேஷ் பந்தில் பெரிய ஷாட் முயற்சியில் டைமிங் மிஸ்ஸான நிலையில் லாங்-ஆனில் நின்ற ஐடன் மார்க்ரம் வசம் சிக்கி நரைன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இது லக்னோ அணியின் பார்வையில் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.

நரைன் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, திக்வேஷ் ரதி பேட்டர் அருகில் சென்று அவருக்கு நோட்புக் வழியனுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை வெளிப்படுத்த புதிய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.

கொல்கத்தா போட்டிக்கு முன்னர் லக்னோ அணி விளையாடிய மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் விக்கெட் வீழ்த்திய பிறகு நோட் புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் திக்வேஷ். அதாவது, அவுட்டான பேட்ஸ்மேன் அருகே சென்று கைகளில் எழுதி குறிப்பது போன்ற அந்த கொண்டாட்டத்துக்கு பிசிசிஐ-க்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதற்காக திக்வேஷ்க்கு இரண்டு முறை போட்டி கட்டணத்தில் இருந்து அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் நரைன் விக்கெட்டை வீழ்த்திய திக்வேஷ் இந்த முறை உஷராக நோட் புக் கொண்டாட்டத்தை விடுத்து, உட்கார்ந்தவாறு மைதானத்தில் உள்ள 'புல்லில் எழுதி' கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அபராதம் மட்டுமல்லாமல் பிசிசிஐயின் எச்சரிக்கை காரணமாக தனது கொண்டாட்டத்தை திக்வேஷ் இதுபோன்று மாற்றி இருக்கலாம்.

பிசிசிஐ தடையிலிருந்து தப்பித்த திக்வேஷ் சிங்

நோட் புக் கொண்டாட்டமான வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் மூலம் பிரபலமானது. இதை பின்தொடர்ந்த திக்வேஷ் ரதி, பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை வீழ்த்திய பின் நோட் புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதற்காக அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் ஒரு தகுதி இழப்புப் புள்ளி வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நமன் திர் ஆட்டமிழந்த பிறகு மீண்டும் அதே கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், இரண்டு தகுதி இழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டன.

ரதி மீண்டும் தண்டிக்கப்பட்டிருந்தால், அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 75 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு, மேலும் அதிக தகுதி இழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டிருக்கும். இதன் விளைவாக ஒரு போட்டி விளையாட தடையும் விதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு நடக்காமல் எஸ்கேப் ஆகியுள்ளார்.

திக்வேஷ் தண்டனையிலிருந்து தப்பித்திருந்தாலும், அவரது புல்தரையில் எழுதுதல் கொண்டாட்டத்துக்கு எந்த விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை. இப்படியான நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது அடுத்த போட்டியை குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் திக்வேஷ் எந்த மாதிரியான கொண்டாட்டத்தில் ஈடுபடவுள்ளார் என்பதை கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பாக உள்ளது.