MS Dhoni Retirement: “இப்போதைக்கு இல்லை.. ஆனா இன்னொரு சீசன்..” ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி
MS Dhoni Retirement: ஐபிஎல் 2025 தொடரில் சிஎஸ்கே அணியின் மோசமான செயல்பாடு, தோனியின் ஓய்வு குறித்து நாளுக்கு நாள் புதிதாக தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே தனது ஓய்வு குறித்து மனம் திறந்துள்ளார் தோனி.

ஐபிஎல் 2025 தொடர் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில் தற்போது அனைத்து அணிகலும் 3 போட்டிகளை விளையாடி முடித்துள்ளன. சில அணிகள் நான்கு போட்டிகள் விளையாடியுள்ளன. கடந்த காலங்களில் ஐபிஎல் கோப்பை வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகள் இந்த முறை தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை கோப்பை வென்று கொடுத்தவரும், சிஎஸ்கே அணியின் அடையாளமாகவும் திகழ்ந்து வந்த எம்எஸ் தோனியின் ஆட்டத்திறன் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. தற்போது 43 வயதாகும் தோனி சர்வதேச கிரிக்கெட், உள்ளூர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை பெற்ற நிலையில், ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.
இதற்கிடையே கடந்த சில ஐபிஎல் சீசன்களில் முடிவடையும் போதும், அல்லது தொடர் நடந்துகொண்டிருக்கும் போதும் அவரது ஓய்வு குறித்து பல்வேறு விதமான தகவல்கள் உலா வந்துள்ளன. இந்த சூழ்நிலையில் ஓய்வு குறித்து உலா வரும் வதந்திகளுக்கு தோனி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.