Jay Shah: 'இலங்கை கிரிக்கெட் அழிவுக்கு ஜெய் ஷா தான் காரணம்'-இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் குற்றச்சாட்டு
1996 உலகக் கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் அர்ஜுன ரணதுங்கா, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இலங்கை வாரியத்தை இயக்குவதாகக் குற்றம் சாட்டினார்.

பிசிசிஐ கவுரவச் செயலர் ஜெய்ஷா, இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும், அரசியல்வாதியுமான அர்ஜுன ரணதுங்கா
‘இலங்கை கிரிக்கெட் அணியின் அழிவுக்கு பிசிசிஐ செயலர் ஜெய் ஷா தான் காரணம்’என இலங்கை அணி முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்கா தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் உள் விவகாரங்களில் அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து ஐ.சி.சி, இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதையடுத்து இலங்கை கிரிக்கெட் கடும் அடியை சந்தித்தது. 2023 ஐ.சி.சி உலகக் கோப்பையில் மோசமான தோல்வியைத் தொடர்ந்து, இலங்கையின் விளையாட்டு அமைச்சர் ரோஷன் ரணசிங்க முழு வாரியத்தையும் நீக்கியது குறிப்பிடத்தக்கது.