IND vs AUS: ‘பெர்த் சத்தத்தை நிறுத்திய இந்திய ஓப்பனர்ஸ்’ ஜெய்ஸ்வால்-ராகுல் ஆட்டத்தில் ஆட்டம் கண்ட ஆஸி!
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Aus: ‘பெர்த் சத்தத்தை நிறுத்திய இந்திய ஓப்பனர்ஸ்’ ஜெய்ஸ்வால்-ராகுல் ஆட்டத்தில் ஆட்டம் கண்ட ஆஸி!

IND vs AUS: ‘பெர்த் சத்தத்தை நிறுத்திய இந்திய ஓப்பனர்ஸ்’ ஜெய்ஸ்வால்-ராகுல் ஆட்டத்தில் ஆட்டம் கண்ட ஆஸி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Nov 23, 2024 03:46 PM IST

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 57 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. விக்கெட் எடுக்க முடியாமல் ஆஸி., வீரர்கள் திணறினர்.

IND vs AUS: ‘பெர்த் சத்தத்தை நிறுத்திய இந்திய ஓப்பனர்ஸ்’ ஜெய்ஸ்வால்-ராகுல் ஆட்டத்தில் ஆட்டம் கண்ட ஆஸி!
IND vs AUS: ‘பெர்த் சத்தத்தை நிறுத்திய இந்திய ஓப்பனர்ஸ்’ ஜெய்ஸ்வால்-ராகுல் ஆட்டத்தில் ஆட்டம் கண்ட ஆஸி! (AFP)

நிலைத்து நின்ற இந்திய தொடக்கவீரர்கள்

கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தங்கள் தனிப்பட்ட அரைசதத்தை பூர்த்தி செய்து தற்போது கிரீஸில் உள்ளனர். பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 57 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி இதுவரை ஒரு விக்கெட் கூட இழக்காதது நல்ல செய்தி.

கே.எல்.ராகுல் 153 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் குவித்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 193 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 90 ரன்கள் குவித்தார். இந்திய ஓப்பனர்களை ஆட்டமிழக்க முடியாமல் ஆஸி., பவுலர்கள் திணறினர். மும்பையில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம் என்று ஆஸி., கேப்டன் கம்மின்ஸ் கூறி, அதன் படி ஆஸி., வெற்றியும் பெற்றது. அந்த சம்பவத்திற்கு பதிலடி தரும் விதமாக, இந்திய ஓப்பனர்கள் இன்று பெர்த் மைதானத்தில் இருந்த ஆஸி., ரசிகர்களை அமைதியாக்கினர். அவர்களை சோர்வடை செய்தனர். அவர்களை விட ஆஸி., வீரர்கள் இன்னும் சோர்வடைந்தனர்.

2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய பவுலர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி 51.2 ஓவர்களில் 104 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கி அவுஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்தினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்கள் மட்டுமே எடுத்து 49.4 ஓவர்களில் ஆல் அவுட்டானது.

ரிஷப் பந்த் (37), நிதிஷ் ரெட்டி (41) ஆகியோரைத் தவிர, ஜோஷ் ஹேசில்வுட் தலைமையிலான ஆஸ்திரேலிய பந்துவீச்சு தாக்குதலுக்கு முன்னால் வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை.

கேப்டன்கள் பட்டியலில் இணைந்தார் பும்ரா:

இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா 18 ஓவர்கள் வீசி 30 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது 11 வது சர்வதேச ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய கேப்டன்களின் உயரடுக்கு குழுவில் இணைந்தார், இதில் கபில் தேவ், வினு மன்கட், பிஷன் பேடி மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோர் அடங்குவர்.

செனா நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் கபில் தேவை எதிர்த்து முதலிடம் பிடித்தார். அவர் வீசிய 11 5 விக்கெட்டுகளில், 7 விக்கெட்டுகள் இந்த நாடுகளில் வந்தவை. சந்திரசேகர் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.