ஐபிஎல் 2025: ஆர்சிபி போல் வித்தையை இறக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே.. இனி ப்ளேஆஃப் தகுதி பெற வழி என்ன?
கடந்த 2024 சீசனில் 6 தொடர் வெற்றிகளை பெற்ற ஆர்சிபி ப்ளேஆஃப் சுற்றில் தகுதி பெற்றது. அந்த நிலை தற்போது சிஎஸ்கேவுக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சீசனில் ஆர்சிபி போல், இப்போது சிஎஸ்கே வித்தையை இறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் 2025 ப்ளேஆஃப்பில் சிஎஸ்கே தகுதி பெற வழிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாக இருந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இந்த சீசனில் 6வது தோல்வியை சந்தித்துள்ளது.அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக தொடரிலிருந்து பாதியிலேயே விலக, கேப்டனாக எம்எஸ் தோனி நியமிக்கப்பட்டார். தற்போது வரை இந்த சீசனில் 8 போட்டிகளில் விளையாடியிருக்கும் சிஎஸ்கே 2 வெற்றி, 6 தோல்விகளை சந்தித்துள்ளது. அத்துடன் புள்ளிப்பட்டியலிலும் தொடர்ந்து 10வது இடத்தில் நீடிக்கிறது.
இனி 6 போட்டிகள் மட்டும் எஞ்சியிருக்கும் நிலையில், ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சிஎஸ்கேவுக்கு அமைந்துள்ளது. இந்த போட்டிகளில் வெற்றியை பெறுவதோடு மட்டுமல்லாமல் நல்ல ரன்ரேட்டையும் தக்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் இருந்தும் சிஎஸ்கே ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.