ஐபிஎல் 2025: 10 வருட தவம்.. வரலாறு படைத்த ஆர்சிபி கேப்டன் பட்டிதார்.. பிசிசிஐ அளித்த தண்டனை! அப்படி என்ன செய்தார்?
ஐபிஎல் 2025: 10 ஆண்டுகள் கழித்து தனது அணிக்கு வான்கடே மைதானத்தில் வைத்து வெற்றியை தேடி தந்துள்ளார் ஆர்சிபி கேப்டன் பட்டிதார். ஆனாலும் இதற்கான பிசிசிஐயின் தண்டனையும் பெற்றுள்ளார். இந்த சீசனில் பாண்டியா, ரியான் பராக் ஆகியோருக்கு அடுத்தபடியாக அபராதம் பெற்ற கேப்டனாகியுள்ளார் பட்டிதார்.

ஐபிஎல் 2025 தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை அதன் உள்ளூர் மைதானமான ஈடன் கார்டனில் வைத்து வீழ்த்தி வெற்றி பயணத்தை தொடங்கியது ஆர்சிபி. இதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதன் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து 17 ஆண்டுகள் கழித்து தோற்கடித்ததது.
இதன் தொடர்ச்சியாக தற்போது மும்பை இந்தியன்ஸ் உள்ளூர் மைதானமான வான்கடேவில் வைத்து 10 ஆண்டுகள் கழித்து வெற்றியை பெற்று வரலாறு படைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி அணி இந்த சீசனில் விளையாடிய 4 போட்டிகளில், 3 வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக ஆர்சிபி பெற்ற வெற்றி வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது. ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் ராஜத் பட்டிதாரின் கேப்டன்சியின் அணியின் செயல்பாடானது இந்த முறை சிறப்பாக இருந்து வருகிறது.