ஐபிஎல் 2025: நோட்ஸ் எழுதி பஞ்சாப் பேட்ஸ்மேனை வழியனுப்பிய லக்னோ பவுலர்.. அபராதத்துடன் குட்டு வைத்த பிசிசிஐ
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஸ்பின்னரான திக்வேஷுக்கு, பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன் பிரியான்ஷ் ஆர்யாவை ஆட்டமிழக்கச் செய்த பிறகு, அனிமேஷன் நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அவரது இந்த செயலுக்கு போட்டிக் கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டதுடன் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025 ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு சுவாரஸ்யங்கள் இடம்பெறுவது போல், வீரர்களுக்கு இடையிலான மோதல்கள், சர்ச்சைகள் போன்றவற்றுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. வீரர்களுக்கு இடையே ஸ்லெட்ஜ் செய்து கொள்வது எனபது வரம்பு மீறனாலோ அல்லது விதிகளுக்க அப்பாற்பட்டதாக இருந்தாலோ தவறில் ஈடுபடும் வீரர்களுக்கு அபராதம், தகுதி இழப்பு புள்ளிகள் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஐபிஎல் 2025 சீசனில், ஸ்லெட்ஜிங் சர்ச்சையில் சிக்கி அபராதம் மற்றும் தகுதி இழப்பு புள்ளிகளை பெறும் முதல் வீரர் ஆகியுள்ளார் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஸ்பின் பவுலரான திக்வேஷ் சிங் ரதி. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி மீது பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.
லக்னோ பவுலருக்கு அபராதம்
பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை ஆட்டமிழக்க செய்த பிறகு, களத்தை விட்டு வெளியேறிய அவர் அருகே சென்று அனிமேஷன் நோட்புக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய திக்வேஷ் சிங் ரதிக்கு போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும் அளிக்கப்பட்டுள்ளது.
