Ind vs SL: இரண்டு வீரர்கள் அடுத்தடுத்து விலகல்..! இலங்கை அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு
இந்தியாவுக்கு எதிரான தொடர் தொடங்கும் முன்னரே காயம் காரணமாக இரண்டு வீரர்கள் இலங்கை அணியில் இருந்து விலகியுள்ளனர். இதனால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டி20, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதலில் டி20 தொடர் ஜூலை 27ஆம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து போட்டி தொடங்குவதற்கு முன் இரண்டு முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
இடது கட்டை விரலில் காயம்
இந்தியாவுக்கு எதிரான போட்டிக்காக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா உள்பட அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டபோது துஷாரா இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்கான் செய்து பார்த்தபோது அவரது கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கை வெளியானது.
இதனால் அவர் இந்தியாவுக்கு எதிரான இலங்கை டி20 அணியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தில்ஷான் மதுஷங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.