Sukra Luck: பணத்தை அள்ளிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. மார்ச் மாதத்தில் இருந்து இந்த ராசிகள் கொடி பறக்குமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra Luck: பணத்தை அள்ளிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. மார்ச் மாதத்தில் இருந்து இந்த ராசிகள் கொடி பறக்குமா?

Sukra Luck: பணத்தை அள்ளிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. மார்ச் மாதத்தில் இருந்து இந்த ராசிகள் கொடி பறக்குமா?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Feb 15, 2025 05:51 PM IST

Sukra Luck: சுக்கிரனின் வக்கிர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

Sukra Luck: பணத்தை அள்ளிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. மார்ச் மாதத்தில் இருந்து இந்த ராசிகள் கொடி பறக்குமா?
Sukra Luck: பணத்தை அள்ளிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. மார்ச் மாதத்தில் இருந்து இந்த ராசிகள் கொடி பறக்குமா?

இது போன்ற போட்டோக்கள்

சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல், அழகு உள்ளிட்டவைகளுக்கு காரனையாக திகழ்ந்து வருவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் சுக்கிரன் வருகின்ற மார்ச் இரண்டாம் தேதி அன்று வக்கிர பயணத்தை தொடங்குகிறார். சுக்கிரனின் வக்கிர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காணலாம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

தனுசு ராசி

சுக்கிரனின் வக்கர பயணம் உங்களுக்கு புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் நல்ல செய்தி உங்களை தேடி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

வருமானத்தை அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும் என கூறப்படுகிறது. நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, காதல் வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கப்படப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

மீன ராசி

சுக்கிரனின் வக்கிர பயணம் உங்களுக்கு அற்புதமான முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் என கூறப்படுகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன்னம்பிக்கை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மன அமைதி உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடக ராசி

சுக்கிரனின் வக்கிர பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஆன்மீகத்தில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் என கூறப்படுகிறது. வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

 

Suriyakumar Jayabalan

TwittereMail
ஜெ. சூரியகுமார், 2019ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இளங்கலை வணிகவியல், இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் ஆன்மீகம், சினிமா, புகைப்படத்தொகுப்பு, வீடியோ சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இசை கேட்பது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைதல் இவரது பொழுது போக்கு
Whats_app_banner